Wednesday, July 1, 2009

மாதம் ரூ.25 லட்சத்துக்கு மருந்து சாப்பிட்ட மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைவதற்கு முந்திய ஒரு ஆண்டு காலம், ஏகப்பட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு இருதய கோளாறு, நரம்பு தளர்ச்சி, தசை தளர்ச்சி, மன அழுத்தம், உடல் அசதி, எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற ஏராளமான நோய்கள் இருந்ததாக சொல்லப் படுகிறது. அதற்காக அவர் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனால் டாக்டர்கள் எழுதி கொடுத்ததை விட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். அதுவே அவரது உயிருக்கு எமனாக மாறியது. மைக்கேல் ஜாக்சன் சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள் ஆபத்தானவையாக இல்லா விட்டாலும் அவர் உட்கொண்ட அளவு ஆபத்தானது என்று அவரது குடும்ப வக்கீல் பிரையன் ஆக்ஸ்மன் கூறினார். வழங்கு விசாரணையின் போது ஜாக்சன் வலி நிவாரணி யான விக்கோடின் மாத்திரைகள் தினம் 40 உட்கொண்டதாக கூறப்படுகிறது. பல்வேறு பெயர்களில் ஜாக்சன் மருந்து, மாத்திரைகள் எழுதி வாங்கி இருக்கிறார். 2001ம் ஆண்டு மிக்கிபைன் பார்மசிக்கு ரூ. 3.5 லட்சம் பாக்கி வைத்து உள்ளார். கடைசி காலத்தில் அவர் மாத்திரை, மருந்து வகைக்கு மட்டும் மாதம் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: