Saturday, July 11, 2009

லாரி வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது

டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளதால், லாரி வாடகையை 15 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறது. திருப்பூர் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய்; பெட்ரோல் விலையில் நான்கு ரூபாய் உயர்த்தியுள்ளதால், லாரி உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, டயர், டியூப் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உயர்த்தப்பட்ட டீசல் விலையால் மேலும் நஷ்டமடைய வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. லாரி வாடகையை உயர்த்தும் போது, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகமாகிறது. லாரி உரிமையாளர்கள், வேறு வழியின்றி நடைமுறையில் உள்ள வாடகை கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வை உடனடியாக, நடைமுறைப்படுத்தவும், லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு, சின்னசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: