Thursday, April 16, 2009

சத்யம் பங்குகளை வாங்க டெக் மகேந்திராவுக்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்ள, டெக் மகேந்திராவுக்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல் கொடுத்து விட்டது. சத்யத்தின் போர்டு, அதன் 31 சதவீத பங்குகளை டெக் மகேந்திராவுக்கு கொடுக்க சம்மதித்திருந்தாலும் அதற்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 31 சதவீத பங்குகளுக்கான தொகை ரூ.1,756 கோடியை டெக் மகேந்திரா ஏப்ரல் 21க்குள் தனியாக ஒரு அக்கவுன்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கம்பெனி லா போர்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த பணத்தை டெபாசிட் செய்தபின், புதிதாக அமைக்க இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் போர்டுக்காக அதிகபட்சம் நான்கு நபர்களை இயக்குநர்களாக நியமிக்குமாறும் கம்பெனி லா போர்டு டெக் மகேந்திராவை கேட்டுக்கொண்டிருக்கிறது. டெக் மகேந்திராவுக்காக அதன் துணை நிறுவனமான வெஞ்சர்பே கன்சல்டன்ட்ஸ் பி.லிட் தான்இந்த தொகை ரூ.1756 கோடியை டெபாசிட் செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெஞ்சர்பே இந்த தொகையை செலுத்தியதும், அவர்களுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ரூ.10 மதிப்புள்ள பங்குகள் 30,27,64,327 ஒதுக்கப்படும் என்று கம்பெனி லா போர்டு தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: