Monday, April 6, 2009

ஐ.எம்.எஃப்., வைத்திருக்கும் தங்கத்தை விற்க முடிவு

இன்டர்நேஷனல் மானிட்டரி பஃண்ட் ( ஐ.எம்.எஃப்.) நிறுவனம், அது சேமித்து வைத்திருக்கும் தங்கத்தை விற்க முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஜி - 20 நாடுகள் மாநாட்டில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாடுகளுக்கு நிதி உதவி செய்வதற்காக, ஐ.எம்.எஃப்., நிறுவனம், அது வைத்திருக்கும் தங்கத்தை விற்று உதவி செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து உலகில் அதிகம் தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஐ.எம்.எஃப்., அதனிடம் இருக்கும் 3,217 டன் தங்கத்தை ( மதிப்பு 95 பில்லியன் டாலர்கள் இருக்கும் - அதாவது சுமார் ரூ.4.8 லட்சம் கோடி ) விற்று விட முன்வந்திருக்கிறது. இந்த தங்கத்தை விற்று, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், ஏழை நாடுகளுக்கு 6 பில்லியன் டாலர்கள் வரை நிதி உதவி செய்யலாம் என்று லண்டன் ஜி-20 மாநாட்டில் உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தன. உலகிலேயே அதிகம் தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் நாடு அமெரிக்கா தான். அதனிடம் 8,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியிடம் 3,400 டன் தங்கம் இருக்கிறது.


நன்றி : தினமலர்


No comments: