Monday, April 27, 2009

ஐசிஐசிஐ பேங்க்கின் நிகர லாபம் 35 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்கின் நான்காவது காலாண்டு நிகர லாபம், அதற்கு முந்தைய வருடத்தை விட 35.30 சதவீதம் குறைந்திருக்கிறது. மார்ச் 31, 2009 உடன் முடிந்த நான்காவது காலாண்டில் அது பெற்றிருக்கும் நிகர லாபம் ரூ.744 கோடி மட்டுமே. இது, இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.1,150 கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ பேங்க்கின் மொத்த வருமானமும் கடந்த வருடத்தில் ரூ.10,391 கோடியாக இருந்தது இந்த வருடத்தில் ரூ.9,203 கோடியாக குறைந்திருக்கிறது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.,வாக இருந்த ஷிகா சர்மா கடந்த வாரத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த பதவிக்கு, அதன் எக்ஸிகூடிவ் டைரக்டராக இருந்த வைத்யநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தவிர சந்தீப் பக்ஷி என்பவர் அதன் எக்ஸிகூடிவ் டைரக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐசிஐசிஐ லம்பார்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.,வாக பார்கவ் தாஸ்குப்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களது நியமனம் மே ஒன்றாம் தேதியில் இருந்து அமலில் இருக்கும் என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: