Wednesday, March 11, 2009

நிதி விவகாரங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் நம்பகமான நிறுவனம் டாடா குரூப் தான்

நிதி விவகாரங்களை பொறுத்தவரை இந்தியாவின் நம்பகமான கம்பெனி என்ற வரிசையயில் டாடா குரூப் தான் முதல் இடத்தில் வருகிறது. இந்திய முதலீட்டாளர்களிடையே இந்தியாவின் முதல் 10 நம்பகமான கார்பரேட் நிறுவனம் எவைகள் என்று எடுத்த கருத்து கணிப்பில் இது தெரிய வந்திருக்கிறது.ரத்தன் டாடாவுக்கு சொந்தமான டாடா குரூப்பிற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி.குரூப், எல் அண்ட் டி, ஆதித்த பிர்லா ஆகியவை வருகின்றன. சத்யம் கம்ப்யூட்டரில் நடந்ததாக நம்பப்படும் ரூ.7,800 கோடி அளவிலான நிதி மோசடியை அடுத்து, ஈக்குவட்டி மாஸ்டர் என்ற ஈக்குவட்டி ரிசர்ச் நிறுவனம், நிதி விவகாரத்தில் இந்தியாவின் நம்பகமான கம்பெனி எது என்று கருத்து கணிப்பு நடத்தியது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நடந்த நிதி மோசடி ஜனவரி மாதத்தில் வெளியே தெரிய வந்ததில் இருந்து மற்ற நிறுவனங்களின் நிதி அறிக்கை மீது முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று அந்த நிறுவனம் கருத்து கணிப்பு எடுத்தது. அதில் முதல் இடத்தில் டாடா குரூப்தான் வருகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஒன்பதாகவும் அணில் அம்பானியின் நிறுவனம் பத்தாகவும் வந்திருக்கிறது. பார்தி ஏர்டெல், சுந்தரம்/டி.வி.எஸ் குரூப், மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியளை முறையே ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
நன்றி : தினமலர்


1 comment:

அப்பாவி தமிழன் said...

உங்கள் வலை பதிவை இங்கே இணைத்து கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/