Tuesday, February 24, 2009

லேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இன்று காலை பெரும் சரிவுடன் ஆரம்பித்த மும்பை பங்கு சந்தை, மதியத்திற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பின்னர் ஓரளவு சரியானது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 21.15 புள்ளிகள் ( 0.24 சதவீதம் ) மட்டும் குறைந்து 8,822.06 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.55 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 2,733.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி., செய்ல், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், டாடா ஸ்டீல், விப்ரோ, மற்றும் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ஓ.என்.ஜி.சி.,என்.டி.பி.சி., டி.எல்.எஃப், பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரான்பாக்ஸி, கிராசிம், மாருதி, ஐசிஐசிஐ பேங்க், டாடா பவர், அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் எல் அண்ட் டி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: