Tuesday, February 24, 2009

12 வருடங்களுக்குப்பின் அமெரிக்க பங்கு சந்தைகளில் கடும் சரிவு

வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தும் கூட, அந்நாட்டின் பங்கு சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த அக்டோபர் 28, 1997 க்குப்பிறகு மிகப்பெரிய சரிவாக, டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 250.9 புள்ளிகள் ( அல்லது 3.41 சதவீதம் ) சரிந்திருந்தது. ஆனால் வங்கிகளின் பங்குகள் விலை உயர்ந்து தான் இருந்தது. சிட்டி பேங்க் இன் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு முடிவு செய்திருந்த போதும் கூட, வங்கிகள் தனியார் வசமே இருக்கட்டும் என்று தான் விரும்புகின்றன. ஏற்கனவே வந்த தகவலின் படி, சிட்டி குரூப்பின் குறிப்பிடப்பட்ட பங்குகளை அமெரிக்க அரசு வாங்கிக்கொண்டு அதை தேசியமயமாக்கி விடும் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அவ்வாறு சொல்லவில்லை. டெக்னாலஜி துறையை சார்ந்திருக்கும் நாஸ்டாக்கிலும் நேற்கு 53.5 புள்ளிகள் ( அல்லது 3.71 சதவீதம் ) குறைந்திருந்தது. ஐரோப்பிய சந்தைகளான லண்டன் எஃப் டி எஸ் ஸி 100 ன் புள்ளிகள் 1 சதவீதமும், பிரான்சின் கேக் 0.8 சதவீதமும், பிராங்பர்ட்டின் டாக்ஸ் 2 சதவீதமும் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: