Friday, December 19, 2008

'வட்டி வீதம் மேலும் குறையும்'

பணவீக்கம் குறைந்துள்ளதால் வட்டி வீதம் மேலும் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அசோக் சாவ்லா கூறியதாவது: பணவீக்கம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால், வட்டி வீதமும் குறையும். டிசம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு வாரமாக பணவீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால், ரிசர்வ் வங்கி இதைக் கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின், மூன்று லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது. இவ்வாறு அசோக் சாவ்லா கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: