Saturday, December 20, 2008

பங்கு சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல்

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் இன்றும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலேயே இருக்கிறது. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக உயராமலும் குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 23.48 புள்ளிகள் ( 0.23 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,099.91 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 16.75 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 3,077.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, கேப்பிடல் குட்ஸ், பவர், மெட்டல், டெலிகாம் பங்குகள் உயர்ந்திருந்தன. ஓ.என்.ஜி.சி., கெய்ர்ன் இந்தியா, சத்யம், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில வங்கி பங்குகள் பெருளவில் விற்கப்படவும் செய்தன. பணவீக்கம் எதிர்பாராத அளவை விட குறைந்திருப்பதை அடுத்து, வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்ததால், ரியல் எஸ்டேட், ஆட்டோ, இன்ஃரா பங்குகள் நல்ல விலைக்கு போயின. பேங்கிங் பங்குகளும் உயர்ந்திருந்தன. இருந்தாலும் றஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் கொஞ்சம் சரிவில்தான் முடிந்திருக்கின்றன. ஆசியாவை பொருத்தவரை கூடியும் குறைந்தும் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: