Sunday, November 16, 2008

அமெரிக்க நிறுவன திவால் நிலையால்இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு

அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் பல திவாலாகி விட்டதால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பொருளாதார மந்த நிலையால், நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து, டன் அன்ட் பிராட்ஸ்டீட் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:அமெரிக்காவில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்று விட்டன. இருந்தாலும், தங்களின் வர்த்தகத்தை மறுசீரமைத்து லாபம் பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்களின் அன்றாட வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக் கின்றன. ஆனால், முக்கியமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டும் எனில், திவால் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டின் அனுமதி பெற்ற பின்னரே எடுக்க முடியும்.அதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மிகவும் எச்சரிக்கையோடு செயல் பட வேண்டும். தங்களிடம் பொருட்களை வாங்கும் நிறுவனங்களின், நிதிநிலைமை நன்றாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றுமதி செய்யும் பொருட்களை இன்சூ ரன்ஸ் செய்ய வேண்டும்.இந்தியாவில் இருந்து அதிக அளவில் பொருட் களை பெறும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 2007-08ம் ஆண்டில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 13 சதவீதம். இருந்தாலும், அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் பல மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 39 சதவீதம் அதாவது ஐந்து லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும்.மற்ற நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 10.4 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இறக்குமதி 43.3 சதவீதம் கூடியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ஒன்பது லட்சம் கோடியை எட்டும் என, முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அடைய முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனங் கள் பல திவாலானது மட்டுமின்றி, சரக்கு கட்டண உயர்வு, சில நாட்டு அரசுகள் விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றாலும், ஏற்றுமதி பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜவுளி, ஆயத்த ஆடைகள், நகைகள், நவரத்தின கற்கள், வைரங்கள், கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள், பித்தளை பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி ஏற்கனவே மந்தமான நிலையில் உள்ளது.
இவ்வாறு டன் அன்ட் பிராட்ஸ்டீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: