Friday, November 14, 2008

தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்கு சந்தையில் வீழ்ச்சி

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்ற நிலை இருந்த போதிலும், இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக வீழ்ச்சியே ஏற்பட்டள்ளது. கேப்பிடல் குட்ஸ், ஆட்டோ, மெட்டல், சிமென்ட், பவர், ரியல் எஸ்டேட், டெக்னாலஜி, மற்றும் ஆயில் பங்குகள் இன்று அதிகம் நஷ்டமடைந்தன. டாடா டெலி மற்றும் டோகோமோ உடன்பாட்டை அடுத்து டெலிகாம் பங்குகள் லாபமடைந்தன. இன்றைய சரிவுக்கு பெரிதும் காரணமாக இருந்தது ஓ.என்.ஜி.சி., பெல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்.டி.எப்.சி., எல் அண்ட் டி, செய்ல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃராஸ்டிரெக்சர் நிறுவனங்கள்தான். மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் துவங்கி கொஞ்சம் நேரம் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் பின்னர் குறைய துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 150.91 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) 9,385.42 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 38.10 புள்ளிகள் ( 1.34 சதவீதம் ) குறைந்து 2,810.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

No comments: