Friday, November 14, 2008

பார்தி வால்-மார்ட் நிறுவனம் 2009ல் இங்கு கடைகளை திறக்கின்றன

இந்தியாவின் பார்தி என்டர்பிரைசஸ், அமெரிக்காவின் வால்-மார்ட் இணைந்து நடத்தும் பார்தி வால்-மார்ட் என்ற பலசரக்கு மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனம், 2009ல் இங்கு நிறைய ஸ்டோர்களை திறக்க இருக்கிறது. பார்தி வால்-மார்ட்டின் தலைமை செயல் அதிகாரி ராஜ் ஜெயின் இதனை தெரிவித்தார். இதன் மூலம் இந்திய ரீடெய்ல் தொழிலில் அதிக அளவில் ஈடுபட அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இது, இங்கு மொத்த கேஷ் அண்ட் கேரி வியாபாரத்தையும் பேக் எண்ட் சப்ளை நிர்வாகத்தையும் நடத்த இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது, அதன் முதல் ஸ்டோரை பஞ்சாபில் திறக்க இருக்கிறது. இப்போது அந்த நிறுவனம் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் லூதியானாவில் அதற்கான கட்டிடத்தை கட்டும் வேலையை செய்து வருகிறது. 50,000 இலிருந்து 1,00,000 சதுர அடி வரை இருக்கக்கூடிய கட்டிடத்தில் இந்த ஸ்டோர்கள் திறக்கப்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், பலசரக்கு, செருப்பு, ஆடை மற்றும் பொதுவான பொருட்கள் இங்கு விற்கப்படும். இன்னும் 7 வருடங்களில் 15 ஸ்டோர்களை திறக்க இருக்கும் இவர்கள் 5,000 பேருக்கு வேலை கொடுக்கவும் இருக்கிறார்கள்.

நன்றி : தினமலர்



No comments: