Tuesday, November 4, 2008

வட்டிவிகித மாற்றம் குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு : ஐசிஐசிஐ பேங்க்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், இன்னும் சில தினங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் என்று தெரிகிறது. வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்தது. இதன் காரணமாக வங்கிகளும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐசிஐசிஐ பேங்க் இன்னும் சில தினங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். எதிர்பாராதவிதமாக ரிசர்வ் வங்கி, கடந்த சனிக்கிழமை அன்று, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் ( சி.ஆர்.ஆர். ) ஒரு சதவீதத்தை குறைத்து 5.5 சதவீதமாக்கியது. அதே போல் ரிபோ ரேட் என்ற வங்கிகளுக்கான குறைந்த கால வட்டியையும் ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்து 7.5 சதவீதமாக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ஐசிஐசிஐ பேங்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.காமத், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். அதனையடுத்து இன்னும் சில தினங்களில் நாங்களும் வட்டியை குறைப்பது பற்றி முடிவு செய்வோம் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: