Wednesday, October 1, 2008

வதந்திகளை நம்ப வேண்டாம் : ஐசிஐசிஐ வங்கி வேண்டுகோள்


மும்பை : எங்கள் வங்கிக்கு வலுவான நிதி ஆதாரம் இருக்கிறது; எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஐசிஐசிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கடும் நிதி சிக்கலில் இருப்பதாக நேற்று நாட்டின் பல பகுதிகளில் வதந்தி பரப்பப்பட்டது. குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பல ஊர்களில் இந்த வதந்தி பரவியது. ஐசிஐசிஐ வங்கி கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக வந்த வதந்தியை அடுத்து அந்த இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான ஊர்களில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்., களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் பணம் எடுக்க முண்டியடித்தது. எல்லோரும் அவரவர் கணக்கில் இருக்கும் எல்லா பணத்தையுமே எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். இøனால் ஏ.டி.எம்., முன்பு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. இது குறித்து இன்று அந்த வங்கியின் சி இ ஓ மற்றும் மேலாண் இயக்குநர் கே.வி.காமத் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் வங்கிக்கு வலுவான நிதி ஆதாரம் இருக்கிறது. எனவே எங்கள் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதையும் வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். அந்த வதந்திகள் எல்லாம் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தில் பரப்பப்படுகிறது.எனவே அவைகளை கண்டுகொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.4,84,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது. எனவே யாரும் எங்களது நிதி நிலை குறித்து அச்சம் அடைய தேவை இல்லை என்றார்.எங்கள் வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய பணம் எங்களிடம் தாராளமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நன்றி தினமலர்

No comments: