Tuesday, September 9, 2008

சிறிது இறக்கத்துடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை

நேற்று 461 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய மும்பை பங்கு சந்தையில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சந்தை சரிவில் இருந்தாலும் மதியத்திற்கு மேல் கொஞ்சம் மேலே வந்தது. ஆனால் மீண்டும் இறங்கி விட்டது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 44.21 புள்ளிகள் ( 0.3 சதவீதம் ) மட்டும் குறைந்து 14,900.76 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 13.6 புள்ளிகள் ( 0.3 சதவீதம் ) மட்டும் குறைந்து 4,468.70 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், பேங்கிங், ரியாலிடி, பார்மா நிறுவன பங்குகள் அதிகமாக விற்கப்பட்டன. டெலிகாம், ஆயில் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகள் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


No comments: