
மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் உற்பத்தித் திறன் கொண்ட நடுத்தர ரக மற்றும் கனரக வணிக வாகனங்கள் தயாரிப்பதை தனது சொந்த திட்டமாகவும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய இருக்கும் இத்திட்டங்கள் முழுத்திறனுடன் செயல்படும்போது, நான்காயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும், 13 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இத்தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழக அரசு சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, அசோக் லேலண்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர். அசோக் லேலண்ட் சார்பாக ஜி.பி.இந்துஜா, டி.ஜி.இந்துஜா, சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும், நிசான் நிறுவனத்தின் சார்பாக தகாஷி டெராடா, நகாடா ஆகியோரும் உடாநிருந்தானர்.
நன்றி ; தினமலர்
No comments:
Post a Comment