Wednesday, September 24, 2008

இரண்டு மாத மவுனத்துக்கு பின் மீண்டும் சிமென்ட் விலை உயருது


மும்பை: இரண்டு மாத இழு பறிக்கு பின், சிமென்ட் விலை மீண்டும் வரும் 1 தேதி முதல் உயருகிறது; மூட்டைக்கு ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொடிகட்டிப்பறப் பதை அடுத்து, கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருகின்றன. மும்பை, டில்லி மற்றும் தென் மாநிலங்களில் அதிகளவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில அளவில் விற்பனை செய்யப்படும் சிமென்ட் மூட்டைகளுக்கு விலை அதிகரிக்கவில்லை என்றாலும், ஏ.சி.சி., அம்புஜா, ஜே.கே., லட்சுமி மற்றும் பினானி போன்ற பிராண்டு சிமென்ட் மூட்டை விலை வரும் 1ம் தேதி முதல் உயருகிறது. கடந்த ஓராண்டில், சிமென்ட் விலை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டை 245 முதல் 275க்கும் இழுத்தடித்தபடி உள்ளது. போக்குவரத்து செலவு தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 'சிமென்ட் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நிலக்கரி விலை 60 சதவீதம் உயர்ந்து விட்டது. அதனால் தான் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை' என்று, சிமென்ட் உற்பத்தியாளர் கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் 70 சிமென்ட் கம்பெனிகள் உள்ளன; ஆண்டுக்கு 17 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்கின்றன.

நன்றி : தினமலர்

No comments: