Friday, September 12, 2008

விலையை குறைக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக பேரலுக்கு 100 டாலரை ஒட்டியே இருந்து வரும் கச்சா எண்ணெய் விலை, கடந்த வியாழன் அன்று 98 டாலருக்கு கூட வந்தது. விலை குறைந்து வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்காக உடனடியாக இங்கு பெட்ரோலுக்கான விலையை குறைப்பதாக இல்லை என்றார் முரளி தியோரா. கச்சா எண்ணெய் விலை இதை விடவும் குறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பெட்ரோலிய துறை செயலர் பாண்டே தெரிவித்தார். சர்வதேச சந்தையில் பேரலுக்கு 147 டாலர் வரை இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒன்றரை மாதங்களாக குறைந்துகொண்டே வந்து இப்போது 100 டாலரை ஒட்டி இருக்கிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை சராசரியாக 95.47 டாலராக இருக்கிறது. இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்றார் பாண்டே. கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு முன் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அது இப்போது ரூ.400 கோடியாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: