Friday, September 12, 2008

இந்தியாவில் ஆண்டு தோறும் ரூ.80 ஆயிரம் கோடி நகைகள் விற்பனை

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக டைட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ஆபரணப் பிரிவு) துணை தலைவர் எல்.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: உலகில், ஆண்டு தோறும் மூன்றாயிரம் டன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 800 டன் கொள்முதல் ஆகிறது. உலகளவில் தங்கத்தின் தரம் பார்க்கும் கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 95 சதவீத வாடிக்கையாளர்களுக்கு, 12 முதல் 36 சதவீதம் வரை தரம் குறைவான தங்க நகை கிடைக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எட்டாயிரம் கோடி ரூபாய் வரை இழக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவில் 10 லட்சம் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளோம். இந்திய அளவில் காரைக்குடியில் துவக்கப்பட்டது 28வது கிளை. தமிழகத்தில் இது 16வது கிளை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள 834 நகரங்களில் கிளைகள் துவக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் மூன்றாயிரம் டிசைன்கள் உள்ளன. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: