Sunday, August 24, 2008

சம்பளம் அதிகம் நுகர்வு அதிகம்: பணவீக்கம் இன்னும் ஏறும்: பிரிட்டன் வங்கி கணிப்பு

கணிசமான துறைகளில் சம்பளம் அதிகமாக உள்ளது; அதனால், உணவுப் பொருட்கள் முதல் பல பொருட்களின் நுகர்வு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பணவீக்கம் இந் தாண்டு இறுதி வரை குறைய வாய்ப்பே இல்லை!பிரிட்டனின் பிரபல வங்கி 'பெர்க்லே' இப்படி கணித்துள்ளது.அதன் சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணவீக்கம் அதிகரிப்பு, அதன் விளைவாக உணவு, எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு எல்லாம் சர்வதேச அளவில் பரவலாக உள்ளது. இந்தியாவில் இப்போது பல துறையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள் ளது. சர்வதேச அளவுக்கு சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், நுகர்வுப் பொருட்களும் சர்வதேச அளவில் இந்தியாவில் தான் அதிகரித்து வருகிறது.
பண வீக்கம், விலைவாசி ஏற்றம் இருந்தாலும், நுகர்வு மட்டும் இன்னும் குறையவே இல்லை. சம்பள உயர்வு அதிக அளவில் குறைக்கப் படவில்லை என்பதால், நுகர்வுப் பொருட்கள் சதவீதம் குறையவில்லை. பலரும் இன்னும் பொருட் களை வாங்கும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை; சிக்கனத்தை கடைபிடிப்போர் எண்ணிக்கையும் குறைவு தான்.பணவீக்க உயர்வை அடுத்து, பழங்கள் விலை 9 சதவீதம் அதிகரித் துள்ளது. இதுபோல, பருப்புகள் விலை 2 சதவீதம், டீசல் விலை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. விலைவாசி ஏறியும், நுகர்வு சதவீதம் குறையாத நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 17 சதவீதத்தை எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது.சாப்ட்வேர் உட்பட பல துறைகளில் இன்னமும் சம்பள உயர்வு 15 சதவீதம் வரை இருப்பதால், விலை வாசி ஏற்றம், கணிசமான பேருக்கு பெரிய பாதிப்பாகவே இல்லை. அதனால் அவர்களின் நுகர்வில் பெரிய அளவில் குறைவு ஏற்படவில்லை.
மொத்த வளர்ச்சி உயர்வு கடந்தாண்டு வரை 9 சதவீதமாக இருந்தது; இப்போது 8ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பல திட்டங்கள் தாமதமாகியும், முடங்கியும் உள்ளது தான்.பணவீக்க நிலை பங்குச்சந்தையையும் பாதித்து வருகிறது. இப்போது கண்டுள்ள சரிவுக்கே பலரும் வேதனைப்படுகின்றனர். பங்குச்சந்தையில் இன்னமும் சரிவு ஏற்படும்.இவ்வாறு சர்வேயில் கூறப்பட் டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: