Thursday, November 19, 2009

மேலே போக நிலை பெறுகிறது பங்குச் சந்தை

திங்கள் முதல் நேற்று வரை சந்தை ரோலர் கோஸ்டர் போல மேலே கீழே சென்று வந்தாலும், சந்தைக்கு பழுதில்லாமல் இருந்தது. சாப்ட்வேர் பங்குகள், மெட்டல் பங்குகள் சந்தையை சிறிது ஏற்றிச் சென்றன.
திங்களன்று அமெரிக்க டாலர் வீக்காக இருந்ததால் மற்ற நாடுகளில் சந்தையின் மாற்றங்களை வைத்து இங்கேயும் மேலே சென்றது. மேலும், செப்டம்பரில் கார் விற்பனை கூடியிருந்ததால் மாருதி சுசூகி கம்பெனியின் பங்குகள் மிகவும் மேலே சென்றது. அது சந்தை மேலே செல்லக்காரணமாக இருந்தது. அன்றைய தினம் முடிவாக 183 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. நேற்று முன்தினம் காலை முதலே சந்தை கீழேயே இருந்தது. ஆனால், மதியத்திற்கு மேலே தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் மேலே இருந்ததால் இங்கும் சந்தை மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஆதலால், சந்தை அன்றைய தினம் முடிவாக 18 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. நேற்று, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதும் சந்தை கீழே வர ஒரு காரணம். சந்தை சமீபகாலத்தில் மேலே சென்றிருக்கிறது. இது லாபம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்று கருதி விற்றதால் காலையில் மேலே இருந்த சந்தை பின்னர் கீழே சென்று முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 52 புள்ளிகள் குறைந்து 16,998 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 7 புள்ளிகள் குறந்து 5,054 புள்ளிகளுடனும் முடிந்தது. தங்கம்: டாலர் வீக்காக இருப்பது தங்கம் விலையேற்றத் திற்கு ஒரு காரணம். தங்கம் விலை கூடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்கள். ஒன்று, திருமண காலம் வருவது. இன்னொன்று தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி சிறிது குறைவு. மேலும், அதை சரிக்கட்ட பழைய நகைகள், ஸ்க்ராப் சந்தைக்கு வரும். அது சந்தைக்கு ஈடு கொடுக்கும். ஆனால், அந்த வரத்து நின்றுவிட்டது. ஏனெனில் விற்பவர்கள் இன்னும் அதிகம் விலை வரும் என்று காத்திருப்பதால் தான்.
ரிலையன்ஸ்: ரிலையன்ஸ் சமீப காலத்தில் மட்டும் 18 சதவீதம் கூடியுள்ளது. வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களில் இரண்டு மிகவும் முக்கியமானவை. ஒன்று எரிசக்தித் துறையில் பெரிய அளவில் நுழையவுள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருக்கும் கம்பெனியை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடும். இரண்டாவது, வரும் இரண்டு வருடங்களில் கடன் இல்லாத கம்பெனியாக மாறும் என்பது. மேலும், அறிவிக்கப்பட்ட போனஸ் வரும் 27ம் தேதி ரெகார்ட் தேதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த தேதியில் உள்ள பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சாப்ட்வேர் பங்குகள்: சாப்ட் வேர் பங்குகளை வாங்குங் கள் என்று சென்ற வாரம் கூறியிருந்தோம். அப்படி வாங்கியிருந்தால் நல்ல லாபத்தை சில நாட்களிலேயே பார்த்திருக்கலாம். ஏனெனில், அந்த அளவிற்கு சந்தையில் அந்தப் பங்குகளில் ஏற்றம் இருந்தது.
காக்ஸ் அண்டு கிங்ஸ் புதிய வெளியீடு: காக்ஸ் அண்டு கிங்சின் புதிய வெளியீடு வந்துள்ளது பெரிய எதிர்பார்ப்புகளை சந்தையில் ஏற்படுத்தியுள்ளன. 70 வருட பழமையான கம்பெனி என்பதால் அதிகப்படியாக செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் நாள் முடிவில் 0.60 தடவையே செலுத்தப் பட்டுள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : வரும் நாட்கள் சிறிது மேலே கீழே இருந்தாலும் சந்தைக்கு பழுதில்லை. சந்தை 17,000 புள்ளிகளை சுற்றியே வருவது சிறிது தெம்பளிக்கிறது. சந்தை இம்மாதம் 11 சதவீதம் வரை கூடியுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: