Thursday, November 5, 2009

800 பேரின் வேலையை பறித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்

800 பேரின் வேலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பறித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்களின் 800 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், ஏற்கனவே இதற்காக 5 ஆயிரம் பேர் நீக்கப் பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம தெரிவித்துள்ளது. ஏற்கனவே, செலவுகளை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக 96 ஆயிரம் பணியாளர்களின் 5 ஆயிரம் பேரை அல்லது 5 சதவீதம் பணியாளர்களை வரும் ஜூன் 2010ம் ஆண்டிற்குள் நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டு, அதன்படி 5 ஆயிரம் பேரை நீக்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக இத்திட்டத்தின்படி, மேலும் 800 பேரை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி கணக்கின்படி, உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 91,005 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


No comments: