
800 பேரின் வேலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பறித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்களின் 800 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், ஏற்கனவே இதற்காக 5 ஆயிரம் பேர் நீக்கப் பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம தெரிவித்துள்ளது. ஏற்கனவே, செலவுகளை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக 96 ஆயிரம் பணியாளர்களின் 5 ஆயிரம் பேரை அல்லது 5 சதவீதம் பணியாளர்களை வரும் ஜூன் 2010ம் ஆண்டிற்குள் நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டு, அதன்படி 5 ஆயிரம் பேரை நீக்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக இத்திட்டத்தின்படி, மேலும் 800 பேரை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி கணக்கின்படி, உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 91,005 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment