Wednesday, November 18, 2009

குர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்கிறது ஹனிவெல்

குர்கானில் 157 கோடி ரூபாய் மதிப்பில் டெக்னாலஜி சென்டர் அமைக்க ஹனிவெல் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குளோபல் ரிசர்சை மேலும் விரிவுப் படுத்தும் விதமாக புதிய டெக்னாலஜி சென்டர் அமைக்க உள்ளோம். இதற்காக 34 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளோம். இந்திய ரூபாயின் மதிப்பில் இது 157 கோடி ரூபாயாகும். குர்கானில் அமைக்கப் பட உள்ள இந்த சென்டருக்காக அப்பகுதியில் சுமார் நான்கு லட்சம் ஸ்குயர் பீட் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கு அமைக்கப் பட உள்ள டெக்னாலஜி சென்டருக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: