Thursday, November 26, 2009

பணவீக்கம்(உணவு) 15.58%ஆக உயர்வு


நவம்பர் இரண்டாம் வாரத்‌தில், உணவுப் பொருட்கள் அடிப்படையில் கணக்கிடப் படும் நாட்டின் பணவீக்கம் 15.58 சதவீதமாக உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 14.55ஆக இருந்தது. பருப்பு மற்றும் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து இருப்பதே பணவீக்க அதிகரிப்பிற்கு காரணம் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆண்டு கணக்கெடுப்பின் படி, உருளைக்கிழங்கின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அவரை, மொச்சை போன்ற தானிய வகைகளின் விலையும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தில், சிக்கன் மற்றும் யுராத் போன்றவற்றின் விலை 15 சதவீதமும், முட்டை விலை 8 சதவீதமும், பாசிபருப்பின் விலை 6 சதவீதமும், துவரம்பருப்பின் விலை 5 சதவீதமும், பழங்கள் மற்றும் காய்கறி விலை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத நிலக்கடலை விதை விலை 2 சதவீதமும், பட்டு மூலப்பொருள் விலை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

நன்றி : தினமலர்


No comments: