Wednesday, August 5, 2009

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,களை நிறுவ ரூ.40 கோடிக்கு ஆர்டர் பெற்றது ஹெச்.சி.எல்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க்கின் ஏ.டி.எம்., களை நிறுவ, அந்த வங்கியிடமிருந்து ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஹெச்.சி.எல்., நிறுவனம் ஆர்டர் பெற்றிருக்கிறது. ஏ.டி.எம்.,களை நிறுவுவது, பராமரிப்பது மற்றும் சர்வீஸ் செய்வது போன்ற வேலைகளை ஹெச்.சி.எல்.நிறுவனம் செய்யும். நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்.,களை ஹெச்.சி.எல்., நிறுவும். ஆனால் அந்த ஏ.டி.எம்.,கள் வழக்கமான ஏ.டி.எம்.,களை விட மாறுபட்டு இருக்கும். அந்த புது ஏ.டி.எம்.,களில் கண் தெரியாதவர்கள் பிரைல் மொழியில் ஆப்பரேட் செய்யவும் பல மொழிகளில் தகவல்களை பெறவும் வசதிகளை கொண்டதாக இருக்கும் என்று ஹெச்.சி.எல் தெரிவித்திருக்கிறது. ஏ.டி.எம்.,களை நிறுவுவதில் உலக அளவில் றபுகழ்பெற்ற கொரிய நிறுவனமான நாடிலஸ் ஹோசுங்குடன் இணைந்து ஹெச்.சி.எல்., இந்த ஏ.டி.எம்.,களை நிறுவ இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: