Friday, July 3, 2009

ரயில்வே பட்ஜெட் காரணமாக பங்கு சந்தையில் முன்னேற்றம்

இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இன்று பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிதி, இன்ஃப்ராஸ்டரக்சர், பார்மா, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் போன்ற துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.56 புள்ளிகள் ( 1.74 சதவீதம் ) உயர்ந்து 14,913.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 75.40 புள்ளிகள் ( 1.73 சதவீதம் ) உயர்ந்து 4,424.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: