Saturday, July 18, 2009

வங்கிகளில் ரூ.50,000 கோடி கடன் வைத்திருக்கும் கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள்

தென் தமிழ்நாட்டின் பெரிய தொழில் மாவட்டங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள், அங்குள்ள பலதரப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.50,000 கோடி வரை கடன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அதிகப்படியான தொகையை கடனாக வைத்திருப்ப தற்கு , அடிக்கடி ஏற்படும் பவர்கட் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது குறித்து சௌத் இந்தியா இஞ்சினியரிங் மேனுஃபேக்சரர்ஸ் ஆசோசியேஷன் ( சீமா ) கருத்து தெரிவித்தபோது, கோயம்புத்தூரில் இருக்கும் இஞ்சினியரிங் தொழில்கள் மட்டும் வங்கிகளில் ரூ.20,000 கோடி வரை கடன் வைத்திருக்கின்றன. அதேபோல், டெக்ஸ்டைல் இன்டஸ்டிரி ரூ.15,000 கோடி வரை கடன் வைத்திருக்கின்றன. திருப்பூரில் இருக்கும் கார்மென்ட்ஸ் துறையினர் ரூ.6,000 கோடி வரை கடன் வைத்திருக்கின்றனர் என்றனர்.அங்குள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நிச்சயமாக ரூ.40,000 கோடிக்கு மேல் கடன் இருக்கும் என்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஃபவுண்டரிகள், ஆட்டோ உதிரி பாக தொழில், பம்ப் செட், டெக்ஸ்டைல் மெஷினரி, மற்றும் இன்டஸ்டிரியல் வால்வ் தயாரிப்பு ஆகிய தொழில்களில் 40 சதவீத வேலையாட்களை மட்டுமே வேலையில் வைத்து வேலை வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் உற்பத்தியும் 50 சதவீதம் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,00,000 பேர் வேலையிழந்திருப்பர் என்கிறார் சீமா வின் தலைவர் ஜெயகுமார் ராமதாஸ்.வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் எங்களது தயாரிப்புகளை சப்ளை செய்ய முடியாமல் போனதால், எங்களுக்கு வரவேண்டிய பல ஆர்டர்கள் குஜராத் மற்றும் லூதியானாவுக்கு சென்றிருக்கிறது. இருந்தாலும் எங்களிடம் விசாரனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்றார் ஜெயகுமார். ரூ.6,000 கோடி வரை கடன் வைத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை தயாரிப்பு நகரமான திருப்பூரின் நிலையை அதை விட மோசம் என்றார் ஜெயக்குமார். திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் சக்கிவேல் இது குறித்து தெரிவிக்கையில், நாங்கள் சீன மற்றும் வங்காளதேச நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டியதிருக்கிறது. அந்த இரு நாடுகளிலும் எங்களது விலையை விட 20 முதல் 30 சதவீதம் வரை குறைவான விலைக்கு ஆர்டர்களை பெறுகிறார்கள். நாங்களும் அந்த விலையை கேட்டால் எங்களுக்கும் ஆர்டர்கள் வந்துகொண்டுதான் இருக்கும். திருப்பூரில் இருந்து 2006 - 07 நிதி ஆண்டில் ரூ.11,000 கோடிக்கு ஏற்றுமதியாகி இருந்தது, 2008 - 09 ல் ரூ.9,500 கோடியாக குறைந்திருக்கிறது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் கடனை தாமதமாக திருப்பி செலுத்த அனுமதிக்கு மாறு, மத்திய நிதி அமைச்சகத்திற்கு அங்கிருந்து கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: