Thursday, July 23, 2009

ஏறியது பங்கு சந்தை : நிப்டி 4,500 புள்ளிகளுக்கு மேல் சென்றது

தொடர்ந்து இரண்டு வர்த்தக நாட்களாக குறைந்திருந்த பங்கு சந்தை குறியீட்டு எண்கள் இன்று உயர்ந்திருக்கிறது. ரியாலிட்டி, மெட்டல், எஃப் எம் சி ஜி, ஆட்டோ, இன்ஃப்ராஸ்டிரக்சர், உள்பட எல்லா துறை பங்குகளும் இன்று அதிக அளவில் வாங்கப்பட்டதால் சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 4,500 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. எல்லா துறை இன்டக்ஸ்களும் பச்சையில் முடிந்திருக்கிறது. மாருதி சுசுகி, ஐடிசி, மற்றும் ஏசிசி பங்குகள் 5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. இன்று அதிகம் லாபம் அடைந்தது மகிந்திரா சத்யம் நிறுவனம் தான். சந்தை முதலீடு அடிப்படையில் பார்க்கும்போது, அது இந்தியாவின் ஐந்து பெரிய ஐடி கம்பெனிகளில் ஒன்றாக வந்து விட்டது. அதன் பங்கு மதிப்பு 14.2 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. கடந்த ஜனவரி 7ம் தேதிக்கு பிறகு இன்று தான் அதன் பங்குகள் ரூ.100 க்கு மேல் விலைக்கு போனது. ஆனால் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்கிய டெக் மகேந்திராவின் பங்குகள் 1.87 சதவீத வளர்ச்சி தான் அடைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 387.92 புள்ளிகள் ( 2.61 சதவீதம் ) உயர்ந்து 15,231.04 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 124.85 புள்ளிகள் ( 2.84 சதவீதம் ) உயர்ந்து 4,523.75 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு இன்று வர்த்தகம் நடந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: