மே 9 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 0.61 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.48 சதவீதமாகத்தான் இருந்தது. தானியங்கள், இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய், சுகர், வாசனைப்பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்ப தால் பணவீக்கம் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தேங்காய் எண்ணெய், மைதா, உப்பு, ஆட்டா ஆகியவைகளின் விலை குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப் படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 8.57 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment