Monday, April 13, 2009

திவால் நோட்டீஸ் கொடுக்கும் வேலையை பாருங்கள் : ஜெனரல் மோட்டார்ஸூக்கு அமெரிக்க அரசு ஆலோசனை

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உலகின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெனரல் மோட்டார்ஸ், வரும் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் திவால் நோட்டீஸ் கொடுப்பதற்கான வேலையை இப்போதே பார்ப்பது நல்லது என்று அமெரிக்க அரசின் நிதித்துறை ஆலோசனை தெரிவித்திருப்பதாக தெரிகிறது. பொருளாதார சரிவால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு ஏற்கனவே அமெரிக்க அரசு 13.4 பில்லியன் டாலர்கள் நிதி உதவி செய்திருக்கிறது. அந்த உதவியை செய்யும் போதே அது, ஜெனரல் மோட்டார்ஸ் அதன் நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தது. அப்போது தான் அதன் விற்பனை மற்றும் மதிப்பு நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருக்கும் என்றது. ஆனால் அரசு சொல்லிய மாற்றங்களை இன்னும் ஜெனரல் மோட்டார்ஸ் செய்யாமல் இருக்கிறது. மேலும் அதற்கு இன்னும் நிறைய பண உதவி தேவைப்படுகிறது. அதை அமெரிக்க அரசு கொடுக்க தயாராக இல்லை. வேறு வழிகளில் தேவையான பணத்தை தயார் செய்ய முடியாமல் போனால் அது திவால் நோட்டீஸ் கொடுப்பதே நல்லது என்று அமெரிக்க அரசின் நிதித்துறை தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: