Tuesday, April 7, 2009

பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது. பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் 25.48 சதவீத பங்குகளை வைத்திருந்த பிரஞ்ச் உணவு நிறுவனமான தானோன் குரூப், அந்த 25.48 சதவீத பங்குகளை நுஸ்லி வாடியா குரூப்பிற்கு சொந்தமான லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்க சம்மதித்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இந்த பங்குகள் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு கைமாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுமார் 200 மில்லியன் டாலர் ( சுமார் 1,000 கோடி ரூபாய் ) கொடுத்து தானேன் குரூப்பிடமிருந்த 60.86 லட்சம் பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் பங்குகளை ( 25.48 சதவீதம் ) வாங்குவதன் மூலம், பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் லீலாலேண்ட்ஸ் இடம் வந்து விடுகிறது. இந்த பங்குகளை வாங்குவது தொடர்பாக, கடந்த மூன்று வருடங்களாக தானோன் குரூப்புக்கும் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு மிடையே நடந்து வந்த கடும் போராட்டம் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: