Wednesday, December 31, 2008

சலுகை கட்டணம்: ஏர் இந்தியா அறிவிப்பு

முன் கூட்டியே டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கான சலுகை கட்டண திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முன்கூட்டியே டிக்கெட் வாங்கும் பயணிகள் மற்றும் சுற்றுலா செல்வோருக்கான சலுகை கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. சில குறிப்பிட்ட வழித்தட விமான டிக்கெட்களுக்கு சலுகை விலையில் ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு 'ஈசி பேர்' 2,575 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 2,375 ரூபாய் கட்டணம். சென்னையிலிருந்து மும்பைக்கு 'ஈசிபேர்' கட்டணம் 4,600 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 3,925; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 3,425 ரூபாய் கட்டணம். டில்லிக்கு 'ஈசி பேர்' கட்டணம் 5,225 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 4,425; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 4,125 ரூபாய் கட்டணம். கோல்கட்டாவிற்கு 'ஈசி பேர்' கட்டணம் 4,725 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 4,125; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 3,675 ரூபாய் கட்டணம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
நன்றி : தினமலர்


No comments: