
'ஓசூர் ரோட்டில், ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 10 லட்சம் ரூபாய். இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் ரூபாய். வரிகள், பதிவு கட்டணம் இலவசம். 100 சதவீத வீட்டுக் கடன் வாங்கித் தரப்படும்!''பேனர் ஹட்டா ரோட்டில், இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சம் ரூபாய். முழுவதும் பர்னிஷிங் செய்யப் பட்டது. அத்துடன் 30க்கு40 அளவுள்ள வீட்டு மனையும் இலவசம்!'இப்படிப்பட்ட அறிவிப்புகள் சமீப நாட்களாக பெங்களூரில் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. வீடு வாங்க நினைப்போர், விலை குறையட்டும், கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்கும் நிறுவனங்களும், ஏற்கனவே ஒருவர் குடியிருந்த வீட்டை, இரண்டாவது முறையாக விற்க நினைப்பவர்களும், வாங்குவோரை கவர்ந்திழுக்கும் வகையில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டபடி உள்ளனர்.இதற்கெல்லாம் காரணம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலைமையே. கட்டி வைத்த வீடுகள் விலை போகாததால், பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு, வீடு வாங்குவோரை கவர நினைக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இருந்தாலும், எதிர்பார்த்த பலன் இல்லை.இது தொடர்பாக, 'சில்வர் லைன்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரூக் முகமது கூறுகையில், 'வீடு வாங்குவோருக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் குறிப்பிட்ட அளவு தருவதாகக் கூறி கூட வீடுகளை விற்க தயாராக உள்ளோம். ஆனாலும், விற்பனை சரிவர இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், குடியிருப்புகளின் விற்பனை 30 முதல் 60 சதவீதம் குறைந்துள்ளது' என்றார். இதேபோன்ற நிலைமை மும்பை, டில்லி, குர்கான் என, பல நகரங்களிலும் காணப்படுகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment