Tuesday, October 28, 2008

ஐசிஐசிஐ வங்கியின் பிரிட்டிஷ் கிளைக்கு ரூ.160 கோடி நஷ்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் இன் பிரிட்டிஷ் கிளை ரூ.160 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே ஐசிஐசிஐ பேங்க், பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்திருக்கிறது. பெருமளவில் கடனை கொடுத்து அது திரும்ப வராததால் கடும் நிதி சிக்கலில் இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி, பின்னர் அந்த வங்கி கொடுத்த விளக்கத்தை அடுத்து அது சரியாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நலிவடைந்த நிதி வங்கியான லேமன் பிரதர்ஸூக்கு பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கடன் கொடுக்கப்போய், ஒரு பெரும் தொகையை இழந்தது. அதன் பின்னரும் ஒரிரு முறை சர்ச்சையில் சிக்கியது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அடிக்கடி வெளிவரும் தகவலை அடுத்து,அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பலர் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கிளை 35 மில்லியன் ( சுமார் 160 கோடி ரூபாய் ) நிகர நஷ்டமடைந்திருப்பது ( நெட் லாஸ் ) வெளியாகி இருக்கிறது.இந்த தகவலை அந்த வங்கியில் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பிரிட்டிஷ் ஐசிஐசிஐ வங்கி கிளையில் 4.9 பில்லியன் டாலர் டெபாசிட் இருப்பதாகவும் அதில் 39 சதவீதம் டர்ம் டெபாசிட் என்றும், அந்த கிளையின் கடன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

No comments: