Thursday, August 28, 2008

பணவீக்கம் உயரும் அபாயம்; சரிவில் முடிந்தது பங்கு சந்தை

பணவீக்கம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 248.45 புள்ளிகள் ( 1.74 சதவீதம் ) குறைந்து 14,048.34 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.10 புள்ளிகள் ( 1.82 சதவீதம் ) குறைந்து 4,214.00 புள்ளிகளில் முடிந்தது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பின்படி இந்தியாவின் பணவீக்கம் 12.63 சதவீதத்தில் இருந்து 12.79 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லியிருந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் பணவீக்கம் 13 சதவீதத்தை விடவும் தாண்டிவிடும் என்று சொன்னார்கள். இதனால் பங்கு சந்தையில் வீழ்ச்சி நிலை காணப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பெல், டி சி எஸ், எல் அண்ட் டி, ஐ சி ஐ சி ஐ பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ என் ஜி சி, டி எல் எஃப் போன்ற நிறுவன பங்குகள் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: