Sunday, August 17, 2008

'ஸ்பா'க்களுக்கு இல்லை பணவீக்க தலைவலி


பணவீக்க தலைவலி எல்லாம், அடிமட்ட மக்களுக்கு தான்; உடலை அழகூட்டும் 'ஸ்பா'க்களுக்கு பணவீக்கம் என்றாலே என்னவென்று தெரியாது! ஆம், பணக்கார பெண்களும், ஆண்களும் அடிக்கடி சென்று உடலை அழகுபடுத்திக்கொள்ள உதவும் 'ஸ்பா'க்களின் வர்த்தகம் குறையவில்லை என்பது மட்டுமல்ல, அதிகரிக்கவும் செய் துள்ளன. சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உட்பட பல நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களிலும், தனியாகவும் 'ஸ்பா'க்கள் இயங்குகின்றன. மூலிகை சாறுகள் மூலம் உடலை அழகூட்ட உதவும் இந்த 'ஸ்பா'க்களில் குறைந்தபட்ச செலவே ரூ.ஐந்தாயிரத்தை தாண்டும். நட்சத்திர ஓட்டல்களில் நுழைந்து விட்டால், 'ஸ்பா' செலவு மட்டும் ஒரு லட்சத்தை எட்டி விடும். வெளிநாட்டவர்கள் , இந்தியா வரும் போதெல்லாம் இந்த மூலிகை முறையை கையாள தவறுவதில்லை; பணத்தை அள்ளி செலவழிக்கின்றனர். மாதத்துக்கு ஏழு லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்யும் 'ஸ்பா' மையங்களில் கடந்த சில மாதங்களில் 18 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்து வருகிறது. வெளிநாட்டவர் எண்ணிக்கையில் குறைவில்லை; ஆனால், அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது தான் குறைந்துள்ளது. பணவீக்கம் காரணமாக ஓட்டல் அறைகள் முன்பதிவு பாதிக்கப்பட்டாலும், வெளிநாட்டவரால் 'ஸ்பா'க் களுக்கு வருமானம் பாதிக்கவில்லை. பெங்களூரில், நடுத்தர ஓட்டல் களில் தங்கி, 'ஸ்பா'க்களுக்கு வரு வோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
வெளிநாட்டவரை தவிர, இந்தியர்களும் இப்போது 'ஸ்பா'க்களுக்கு செல் வது அதிகரித்து வருகிறது. சாப்ட்வேர் உட்பட பல தனியார் நிறுவனங்களில் சம்பளம் அதிகரித்து விட்டதை தொடர்ந்து, மாதம் 'ஸ்பா' செலவு மட்டும் ஐந்தாயிரம் ரூபாய் செலவழிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நன்றி : தினமலர்


No comments: