Monday, August 4, 2008

நெட்'டில் வக்கீல்கள் விளம்பரம் செய்யலாம்


வக்கீல்கள், இன்டர்நெட்டில் தங்கள் தொழில் திறமை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாட்டர்டு அக்கவுன்டன்ட்கள் போல, வக்கீல்கள், தங்கள் தொழில் திறமை பற்றி விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர் களை ஈர்க்க முடியாது. நேரடியாகவோ, மறை முகமாகவோ வக்கீல்கள் விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய பார் கவுன்சில் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, வக்கீல்கள், பத்திரிகைகளில், 'டிவி' போன்ற மீடியாவில் தங்கள் தொழில் பற்றி விளம்பரம் செய்ய முடியாது; பேட்டி கொடுக்க முடியாது; வழக்கு விசாரணை தொடர்பான போட் டோக்களில் இடம்பெறக் கூடாது. பெயர்ப் பலகை கூட, குறிப்பிட்ட அளவில் தான் இருக்க வேண்டும்.ஆனால், பலரும் இந்த விதியை முழுமையாக கடைபிடிப்பதில்லை. காலப்போக்கில் பத்திரிகைகளிலும், 'டிவி'க்களில் பேட்டி, படம் வெளியாவ தும் சகஜமாகி விட்டது. பத்திரிகைகளில் மட்டுமின்றி, விளம்பர பலகைகளையும் வைப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், பார் கவுன்சில் கூடி இது தொடர்பாக ஆலோசித்தது. இன்டர்நெட்டில் வக்கீல்கள் தங்கள் தொழில் பற்றிய தகவல்களை வெளியிடலாம் என்று, விதிகளில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப் பட்டது.பார் கவுன்சில் கொண்டு வந்துள்ள இந்த விதி திருத்தத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார். கடந்த திங்கட்கிழமை அன்று, சுப்ரீம் கோர்ட், இந்த விஷயத்தில் இறுதி அனுமதியை அளித்துள்ளது. இதன்படி, இன்டர்நெட்டில், வக்கீல்கள் தங்கள் தொழில் திறமை பற்றிய விவரங்களை வெளியிடலாம். தனியாக வெப்சைட் வைத்து, அதில் தகவல்களை வெளியிட முடியும்.

நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

வக்கில்களுகு வக்கலாத்து வாங்கி விளம்பரங்கள் அதுவும் இணையத்தில்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com