Tuesday, August 5, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : நிப்டி 4,500 புள்ளிகளை தாண்டியது


இன்றைய பங்கு சந்தையில் மதியத்திற்கு மேல் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 383 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 107 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.மதியத்திற்கு மேல் அதிக அளவில் பங்குகள் வாங்கப்பட்டதாலும், ஐரோப்பிய பங்கு சந்தையில் ஏற்ற நிலை இருந்ததாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததாலும் ( பேரலுக்கு 118 டாலர் ) மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 383.20 புள்ளிகள் ( 2.63 சதவீதம் ) உயர்ந்து 14,961.07 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 107.50 புள்ளிகள் ( 2.45 சதவீதம் ) உயர்ந்து 4,502.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிக பட்சமாக 14,986.63 புள்ளிகளாகவும் குறைந்த பட்சமாக 14,529.21 புள்ளிகளாகவும் இருந்தது. நிப்டி அதிக பட்சமாக 4,515.15 புள்ளிகளாகவும் குறைந்த பட்சமாக 4376 புள்ளிகளாகவும் இருந்தது. இன்று ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி பங்குகள் 6.5 சதவீதமும், ஆட்டோ நிறுவன பங்குகள் 4 சதவீதமும் உயர்ந்திருந்தது. ஹெச் சி எல் டெக் 9.19 சதவீதம், ஐ சி ஐ சி ஐ பேங்க் 8.24 சதவீதம், டி எல் எஃப் 7.66 சதவீதம், யூனிடெக் 7.64 சதவீதம், மாருதி சுசுகி 7.38 சதவீதம், ஹெச் டி எஃப் சி பேங்க் 6.83 சதவீதம், கிராசிம் 6.56 சதவீதம் உயர்ந்திருந்தது. இருந்தாலும் ஸ்டெர்லைட் - 6.76 சதவீதம், கெய்ர்ன் இந்தியா - 4.14 சதவீதம், டாடா ஸ்டீல் - 2.28 சதவீதம், டாடா பவர் - 1.61 சதவீதம், ரான்பாக்ஸி லேப் - 1.52 சதவீதம் குறைந்திருந்தது.

நன்றி : தினமலர்


No comments: