Thursday, June 26, 2008

வட்டியை உயர்த்தியது ஸ்டேட் பேங்க்


மும்பை : வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பி.எல். ஆர்., ( பிரைம் லெண்டிங் ரேட் ) ஐ 0.5 சதவீதம் உயர்த்தி 12.75 சதவீதமாக்கி இருக்கிறது. இந்த புதிய வட்டி விகிதம் நாளையில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ ரேட் மற்றும் பண கையிருப்பு விகிதம் ஆகியவற்றை 0.5 சதவீதத்தை உயர்த்தி இருப்பதை அடுத்து ஸ்டேட் பேங்க்கின் அசட் லயபிலிட்டி கமிட்டி ( ஏ எல் சி ஓ ) இன்று கூடி விவாதித்த பின் இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஸ்டேட் பாங்க்கின் தலைமை நிதி அதிகாரி அசோக் முகந்த் இதனை தெரிவித்தார். கடனுக்கான வட்டியை உயர்த்தியதே தவிர டெபாசிட்டுக்கான வட்டியை உயர்த்தவில்லை. சமீபத்தில் தான் டெபாசிட்டுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருந்தது. எனவே இப்போது உயர்த்தவில்லை என்று முகந்த் தெரிவித்தார்


No comments: