Wednesday, December 31, 2008

சலுகை கட்டணம்: ஏர் இந்தியா அறிவிப்பு

முன் கூட்டியே டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கான சலுகை கட்டண திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முன்கூட்டியே டிக்கெட் வாங்கும் பயணிகள் மற்றும் சுற்றுலா செல்வோருக்கான சலுகை கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. சில குறிப்பிட்ட வழித்தட விமான டிக்கெட்களுக்கு சலுகை விலையில் ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு 'ஈசி பேர்' 2,575 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 2,375 ரூபாய் கட்டணம். சென்னையிலிருந்து மும்பைக்கு 'ஈசிபேர்' கட்டணம் 4,600 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 3,925; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 3,425 ரூபாய் கட்டணம். டில்லிக்கு 'ஈசி பேர்' கட்டணம் 5,225 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 4,425; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 4,125 ரூபாய் கட்டணம். கோல்கட்டாவிற்கு 'ஈசி பேர்' கட்டணம் 4,725 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 4,125; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 3,675 ரூபாய் கட்டணம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
நன்றி : தினமலர்


ஜி.எஸ்.எம்., சேவை துவக்கியது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை நேற்று நாடு முழுவதும் துவக்கியது. இதன் மூலம், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., என, இரண்டு சேவைகளையும் வழங்கும் முதல் தொலை தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 11 ஆயிரம் நகரங்களில் தற்போது ஜி.எஸ்.எம்., சேவையை துவக்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் 22 ஆயிரம் நகரங்களுக்கு சேவை விரிவுபடுத்தப்படும். இந்த ஜி.எஸ்.எம்., நெட்வொர்க்கை வழங்குவதற்காக, கடந்த 15 மாதங்களாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப் பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் சி.டி.எம்.ஏ., சேவையை ஏற்கனவே நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை இதுவரை கிழக்கு மாநிலங்களின் எட்டு வட்டங்களில் மட்டுமே வழங்கி வந்தோம். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 3 ஜி ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. இந்த உயர் தரமான மொபைல் சேவை வழங்குவதற்காக 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் இலங்கை மற்றும் உகாண்டா நாடுகளிலும், ஜி.எஸ்.எம்., சேவையை துவக்க உரிமம் பெற்றுள்ளது. இவ்வாறு அனில் அம்பானி கூறினார்.
நன்றி : தினமலர்


Monday, December 29, 2008

அடுத்த மாதத்திலிருந்து கார்களின் விலை உயர்கிறது

அடுத்த மாதத்தில் இருந்து, கார்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக, கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காக, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு குறித்து அறிவிக்க அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. டொயட்டா நிறுவனம், ஜனவரி முதல் தேதியில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயட்டா நிறுவன உதவி மேலாண்மை இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்களில் ரூபாய், டாலர் மாற்று மதிப்பு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சந்தை நிலைமை தற்போது கார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றார். இருந்தாலும், இந்த விலை உயர்வு மிகவும் அதிக அளவில் இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாருதி நிறுவன வட்டாரங்கள், 'சந்தை நிலவரத்தில் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சி இல்லையெனில், கார் தயாரிப்பை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை' என்றன.
நன்றி : தினமலர்


கடனுக்கான வட்டியை குறைக்கிறது ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ பேங்க்கில் ஹவுசிங், ஆட்டோ மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு ஒரு புத்தாண்டு இனிப்பு செய்தியை அதன் சி.இ.ஓ., மற்றும் மேலாண் இயக்குனர் கே.வி.காமத் அறிவித்திருக்கிறார். இவர்களுக்கான வட்டியை குறைக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜனவரியின் ஆரம்பத்தில் நாங்கள், எங்களிடம் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை குறைப்பது பற்றி அறிவிப்போம் என்றார் அவர். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன புத்தாண்டு பரிசு கொடுக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது இதை அவர் தெரிவித்தார். வட்டி குறைப்பு ஒரு சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில்தான் புதிதாக அவர்களிடம் ஹவுசிங் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை 1.5 சதவீதம் வரை குறைத்திருந்தது. ஜனவரியில் குறைப்பதாக இருந்த வட்டி குறைப்பு, பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

கடந்த ஒரு வாரமாக சரிந்திருந்த பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. பேங்கிங் இன்டக்ஸ் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், பவர் மற்றும் கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. மிட்கேப் 1.58 சதவீதமும் ஸ்மால் கேப் 0.78 சதவீதமும் உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 64.95 புள்ளிகள் ( 2.27 சதவீதம் ) உயர்ந்து 2,922.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 204.60 புள்ளிகள் ( 2.19 சதவீதம் ) உயர்ந்து 9,533.52 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் சத்யம் பங்குகளின் மதிப்பு 9.41 சதவீதம், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 7.26 சதவீதம், ரான்பாக்ஸி லேப் 7.03 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 6.35 சதவீதம், கிராசிம் 5.02 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால் டாடா மோட்டார்ஸ் 4.37 சதவீதம், மகிந்திரா அண்ட் மகிந்திரா 3.67 சதவீதம், மாருதி சுசுகி 2.32 சதவீதம் குறைந்திருந்தது. இன்று ஆசிய பங்கு சந்தைகள் கலந்து முடிந்திருந்தாலும், ஐரோப்பிய சந்தை ஏற்றத்துடன்தான் முடிந்திருக்கிறது.

பங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்தில் இழந்தது ரூ.61,000 கோடி

இந்திய பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவால், 10 பிரபல நிறுவனங்கள் ரூ.61,000 கோடி வரை சந்தை மூலதனத்தை இழந்திருக்கின்றன. 6 பொதுத்துறை நிறுவனங்களும் 4 தனியார் நிறுவனங்களும் மொத்தமாக போன வாரத்தில் இழந்த சந்தை மூலதனம் ரூ. 60,872 கோடி. இந்தியாவின் மதிப்புமிக்க கம்பெனி என்று பெயர் பெற்றுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை மூலதனம் மட்டும் ரூ.21,600 கோடி குறைந்து ரூ.2,00,000 கோடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த வெள்ளி அன்று முடிந்த பங்கு சந்தையுடன் கணக்கிட்டால், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.11,02,154 கோடியில் இருந்து ரூ.10,41,283 கோடியாக குறைந்திருக்கிறது.முகேஷ் அம்பானியின் நிறுவன மதிப்பு ரூ. 2,12,345 கோடியில் இருந்து ரூ.1,90,745 கோடியாக குறைந்திருக்கிறது.இந்த சரிவிலிருந்து தப்பியது பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., என்ற சுரங்க நிறுவனம் மட்டுமே. அதன் சந்தை மூலதனம் ரூ.8,278 கோடி உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


புதுவருடத்தில் இருந்து விமான கட்டணம் குறைகிறது

விமான பயணிகளுக்கு புத்தாண்டிற்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.உள்நாட்டு விமான கட்டணம் குறைகிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. கிங் ஃபிஷர் என்ற தனியார் விமான நிறுவனமும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தை, வரும் ஜனவரியில் இருந்து குறைப்பதாக இப்போது அறிவித்திருக்கின்றன. விமானங்களில் பயன்படுத்தும் விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் இவர்கள் விமான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேர்மன் விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில், விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் விமான கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்திருக்கிறார். விமான எரிபொருள் ( ஏ.டி.எஃப் ) விலை குறைந்திருப்பதால், எங்கள் கம்பெனி பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் இருந்து இப்போது வரை, டில்லியில் ஏ.டி.எஃப்.,விலை 45.2 சதவீதமும், சென்னையில் 44.37 சதவீதமும் குறைந்திருக்கிறது. இதுவரை மற்ற விமான கம்பெனிகள் விமான கட்டண குறைப்பு பற்றி எதுவும் சொல்லாத நிலையில் கிங்ஃபிஷர் மற்றும் ஏர் இந்தியா மட்டுமே கட்டணத்தை ஜனவரியில் இருந்து குறைப்பதாக தெரிவித்திருக்கின்றன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி முதல் வாரத்தில் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், ஜனவரி மத்தியில் இருந்து கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Sunday, December 28, 2008

ஆயத்த ஆடை ஏற்றுமதி 'டல்'

நகை ஏற்றுமதி தொழிலாளர்களை தொடர்ந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் உள்ள இரண்டு லட்சம் பேர் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வைரம் உட்பட அரிய வகை கற்கள், நகைகள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டதை அடுத்து, அந்த தொழிலில் ஈடுபட் டிருந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனது. இந்த ஆபத்து, இப்போது ஆயத்த ஆடைகளுக்கும் ஏற்பட்டு வருகிறது. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் , ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த தொழிலில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தான் அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்கள் இறக்குமதி அளவை குறைத்துக்கொண்டதை அடுத்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் முதல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இதனால், பல நகரங்களில் செயல்பட்டுவந்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், சென்னை மற்றும் பெங்களூரு, ஜெய்ப்பூர், பிவாண்டி ஆகிய நகரங் களில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒன்றே கால் லட்சம் தொழிலாளர்கள் வேலை பறிபோகும் நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம்.
கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்கள் இடையே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடந் துள்ளது; இதன் பின், நவம்பரில் 30 சதவீதம் ஏற்றுமதி சரிந்து விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை மட்டும் 4 சதவீதத்தை நிரப்பி வருகிறது. இப்போது இதில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இவ்வாறு கூட்டமைப்பு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்தாண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள நிலையில், அதற்கு நெருங்கவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
நன்றி : தினமலர்


நிலையற்று தள்ளாடுகிறது பங்குச் சந்தை

வியாழனன்று சந்தைக்கு விடுமுறை. வெள்ளி துவக்கம் நன்றாக இருந்தாலும், போகப் போக சந்தையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. காலையில் சிறிது மேலேயே இருந்த சந்தை, போகப் போக சிறிது கீழே இறங்க ஆரம்பித்தது. வரும் காலங்களில், கம்பெனிகளின் ஆண்டு முடிவுகள் எதிர்பார்த்தது போல இருக்காது என்ற செய்திகளும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஏற் பட்டிருக்கும் போர் மேகமும், சந்தையை கடைசி அரை மணி நேரத்தில் கீழே இழுத்துத் தள்ளியது.
பணவீக்கம் இந்த வாரம் 6.61 சதவீதமாக இருந்தது. இது, சென்ற வார அளவை விட சிறிது தான் குறைவு. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இறுதியாக வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 223 புள்ளிகள் குறைந்து 9,328 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 59 புள்ளிகள் குறைந்து 2,857 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த வாரம் மட்டும் சந்தை 770 புள்ளிகளை இழந்திருக்கிறது.
அட்வான்ஸ் டேக்ஸ்: சென்ற ஆண்டு டிசம்பர் காலாண்டை விட, இந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 22 சதவீதம் குறைவாகக் கட்டப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கம்பெனிகளின் வருமானம் குறைவாக இருக்கும் என்று இது உணர்த்துகிறது. இது, ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம்.
உலகளவில் பங்குச் சந்தை இந்த ஆண்டு கூடியுள்ளதா என்ற கேள்வி பலரது மனதில் வந்திருக்கும். இந்தியாவில் 55 சதவீதம் சந்தை கீழே விழுந்திருக்கிறது. உலகிலேயே அதிகம் கீழே விழுந்த சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. அதே சமயம், ஈரான் நாட்டின் பங்குச் சந்தை (மிகவும் சிறிய சந்தை) நஷ்டமில்லாமல் இந்த ஆண்டை முடிக்கவுள்ளது; சிறிது லாபமும் சம்பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனி, குஜராத்தின் ஜாம் நகரில் தனது உற்பத்தியை துவக்கி விட்டது. 25,000 கோடி ரூபாய் செலவில் துவங்கப் பட்டுள்ள இந்த ரிபைனரி, உலகின் ஆறாவது பெரிய ரிபைனரி. இது, இந்தியாவின் ரிபைனரி அளவை இன்னும் 20 சதவீதம் கூட்டும்.
இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு நாளைக்கு 5,80,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்ய முடியும். ரிலையன்ஸ் இண்டஸ்டீரிசின் முதல் ரிபைனரி இங்கே உள்ளது.
அது 6,60,000 பேரல்கள் சுத்தகரிப்பு செய்யும். இரண்டும் சேர்த்தால், ஒரு நாளைக்கு சுத்திகரிப்பு செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு, உலகிலேயே அதிகமாக ஒரே இடத் தில் சுத்திகரிப்பு செய்யப்படும் அளவு. இதனால், ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன.
சந்தையில் எந்த பங்கு வெளியீடும் இருக்காத நிலையில், போர்டிஸ் ஹாஸ்பிட்டல் தனது உரிமை பங்கு வெளியீட்டை 1,000 கோடி ரூபாய் அளவில் கொண்டு வரவுள்ளது.
இதை, புதிய ஹாஸ் பிட்டல்கள் கட்டவும், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் உபயோகப்படுத்தப் போகின்றனர். 75 சதவீத பங்குகள் கம்பெனியின் பெரிய முதலீட்டாளர்களிடமே இருப்பதால், இந்த உரிமைப் பங்கு வெளியீடு எளிதாகச் செலுத்தப் பட்டு விடும் என்பதில் ஐயமில்லை என்று நினைக்கின்றனர்.
மேலும், அப்பல்லோவிற்கு போட்டியாக உள்ள பெரிய அளவு ஹாஸ்பிட்டல்களில் இதுவும் ஒன்று.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை அல்லாடிக் கொண்டிருப்பது உண்மை. சந்தையில் பணம் போட்டவர்களும் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். உலகளவு அல்லது உள் நாட்டு அளவு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக சந்தை மிகவும் ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. நிலைமைகள் சரியாக நீண்ட நாட்கள் ஆகும்; அதுவரை பொறுமையாக இருப்பேன் என்பவர்களுக்கு இந்த சந்தை ஏற்றதாக இருக்கும்.
-சேதூராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


வேலை பறிப்பு இருக்காது-சம்பள உயர்வும் இருக்காது

இந்தியாவில் சாப்ட்வேர் உட்பட எக்கச்சக்க சம்பளம் தந்து வந்த பல்வேறு தனியார் நிறு வனங்களில், நிதி நெருக்கடி காரணமாக, வேலை நீக்கம் இருக் காது; ஆனால், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு முடக்கப்படும்! சர்வதேச நிதி நெருக்கடியால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்று பலதுறை நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதனால், இந்த நிறுவனங்களின் பணிகளை செய்து வரும் இந்திய சாப்ட்வேர் உட்பட பல் வேறு நிறுவனங்களுக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல சாப்ட்வேர் நிறுவனங் களுக்கு, வெளிநாட்டு நிறுவனங் கள் அளித்துவந்த 'ப்ராஜக்ட்'கள் பறிபோய் வருகின்றன; அதுபோல, பல கால் சென்டர் களுக்கு பணிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கி வைத் துள்ளன.
இதனால், இந்திய நிறுவனங் களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால், இந்திய நிறுவனங்களில் இந்த அளவுக்கு ஆட்குறைப்பு இல்லை. ஆனால், சம்பள உயர்வை குறைக்கவோ, முடக்கி வைக் கவோ முடிவு செய்ய பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, சர்வதேச சர்வே நிறுவனம்,'மெர்சர்' சமீபத்தில் சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்கள்: இந்திய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு கம்பெனி வீதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நடுத்தர அளவில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர் களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க தயா ரில்லை. ஆனால், அடுத்தாண்டுக் கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளன. வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் தான் ஆட்குறைப்பு இருக்கலாம்; ஆனால், அங்கும் முடிந்த அளவுக்கு ஊழியர்களை தக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் 80 சதவீத சாப்ட்வேர் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ப்ராஜக்ட்கள் வராததால், இந்த நிறுவனங்கள் வருவாய் குறைந் துள்ளது.
முன்னணி நிறுவனங்களில் 83 சதவீத நிறுவனங்கள், தங்கள் வருவாய் இந்தாண்டு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கின்றன.
திறமைக்குறைவான ஊழியர் களை தக்க வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கு வேறு பணிகள் அளிக்கப்படலாம். அப்படியும் முடியாதவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 26, 2008

பணவீக்கம் மேலும் குறைந்தது

டிசம்பர் 13ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.61 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், அதற்கு முந்தின வாரத்தில் 6.84 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. அதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் 6.57 சதவீதமாக இருக்கும் என்ற ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பை பொய்யாக்கும் விதமாக அதைவிட சிறிது அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.84 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


2008ல் மியூச்சுவல் பணட் நிறுவனங்கள் இழந்தது ரூ.1,50,000 கோடி

மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களுக்கு லாபமோ நஷ்டமோ மாறி மாறி வரத்தான் செய்யும் என்பது வேறு விஷயம். ஆனால் 2008 ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,50,000 கோடியை ( அல்லது மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பகுதியை ) இழந்திருக்கின்றன. மியூச்சுவல் பண்ட் திட்டம் முதன் முதலில் அமெரிக்காவில் தான் துவங்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள மாஸாசூசட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் 1925 ம் வருடம் ஆரம்பித்தது தான் முதல் மியூச்சுவல் பண்ட் என்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை இப்போது 36 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருக்கின்றன. மியூச்சுவல் பண்ட்டிற்கு 2007 ம் வருடம் ஒரு நல்ல வருடமாக இருந்திருக்கிறது. அந்த வருடத்தில் மட்டும் ரூ.2,30,000 கோடி அதில் புதுதாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதையும் சேர்த்து அந்த வருடத்தில் மொத்தம் ரூ.5,50,000 கோடி முதலீடாக இருந்தது. ஆனால் 2008 ம் வருடம் மியூச்சுவல் பண்ட்க்கு ஒரு மோசமான வருடமாக இருக்கிறது. இந்த வருடம் மட்டும் மியூச்சுவல் பண்ட்டில் ரூ.1,50,000 கோடி முதலீடு குறைந்திருக்கிறது. 2007ல் ரூ.5,50,000 கோடியாக இருந்த அது, இப்போது ரூ.4,00,000 கோடியாக குறைந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களோ, 2009ல் எல்லாம் சரியாகி விடும் என்றும், மீண்டும் மக்கள் மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்ய வருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


தொடர்ந்து சரிந்து வரும் பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு சந்தை சரிந்துள்ளது. இன்று நிப்டி 2900 புள்ளிகளுக்கு கீழேயும், சென்செக்ஸ் 9500 புள்ளிகளுக்கு கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. இன்று வர்த்தகம் துவங்கி சுமார் 3 மணி நேரம் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதியத்திற்கு மேல் குறைய துவங்கியது. மதியத்திற்கு மேல் சந்தை சரிந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் குறைந்திருக்கிறது என்று வந்த செய்தியாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயம் இருப்பதாலும் சந்தை சரிந்து விட்டது என்கிறார்கள். மூன்றாவது காலாண்டில் அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் 22.4 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயமும் இன்று அதிகரித்திருக்கிறது. இந்திய முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள்.இதெல்லாம் பங்கு சந்தையை மதியத்திற்கு மேல் அதிகம் பாதித்திருக்கிறது. ஆயில், பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், மெட்டல், டெக்னாலஜி, பவர் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் இறங்கி இருந்தன. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் டெக்னாலஜிஸ், எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ பேங்க், பெல், எல் அண்ட் டி, செய்ல், விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டி.எல்.எஃப்., ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 239.80 புள்ளிகள் ( 2.51 சதவீதம் ) குறைந்து 9,328.92 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.60 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) குறைந்து 2,857.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


மும்பை நட்சத்திர ஓட்டல்களில் குறைந்து போன 'புக்கிங்'

பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், மும்பை நட்சத்திர ஓட்டல்களில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் எண் ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் வரலாறு காணாத அள விற்கு உயர்ந்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி, மும் பையில், பாக்., பயங்கரவாதிகள், பல நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், 180க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, நட்சத்திர ஓட் டல்கள் மூடப்பட்டு, கடந்த 21ம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட் டன. இந்நிலையில், நட்சத்திர ஓட் டல்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிறிஸ்துமஸ் மற் றும் புத்தாண்டு கொண்டாட் டங்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு குறைந்துவிட்டதாக ஓட்டல் சங்க செயலர் கோர்தே தெரிவித்துள்ளார். மும்பையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர், மும்பை நட்சத் திர ஓட்டல்களில் 30 முதல் 40 சதவீதத்துக்கு 'புக்கிங்' குறைந்துவிட்டது. இதன் காரணமாக, ஓட்டலில் பல அறைகள் காலியாக உள்ளன. அதிகமான ஆடம்பர ஓட்டல் களைக் கொண்டுள்ள கோவாவிலும், இதே நிலை தான் காணப் படுகிறது. தாஜ் ஓட்டலில் மொத்தமுள்ள 268 அறைகளில் 150 அறைகள் பழுது பார்க்கப்பட்டன. இருப் பினும், 56 சதவீத அறைகளே 'புக்கிங்' செய்யப்பட்டன. இவ் வாறு கோர்தே கூறினார். மொத்தம் 550 அறைகளைக் கொண்ட டிரைடென்ட் ஓட்டலில் 16 சதவீத அறைகளே நிரம்பியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 95 அறைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என, அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடற்கரை அருகில் கட்டப் பட்டுள்ள ஓட்டல்களிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட் டங்களை முன்னிட்டு நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை குறைந்த அளவிலேயே இருக் கும் என, ரிட்ஸ் ஓட்டல் பொதுமேலாளர் ஆனந்த் பட் கூறினார். மும்பை சம்பவத்தை தொடர்ந்து, இந்தியர் தரப்பில் 50 முதல் 60 சதவீத புக்கிங்கும், வெளிநாட்டவர் தரப்பில் 30 சதவீத புக்கிங்குகளும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார். புத்தாண்டு கொண்டாட்டங் கள் மட்டுமின்றி, ஓட்டல் வாடகையும் பெருமளவில் குறைந்து போய்விட்டதாகவும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும், குறைந்து விட்டதாகவும், இந்திய டிராவல் ஏஜென்ட்கள் சங்க நிர்வாக கமிட்டியின் கவுரவ பொருளாளர் இக்பால் முல்லா கூறினார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட மும்பை நட்சத் திர ஓட்டல்கள், தங்களது பழைய நிலையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்களாகும் என, ஓட் டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Thursday, December 25, 2008

வீட்டு கடனுதவி சிறப்பு திட்டம் : கார்ப்பரேஷன் வங்கி அறிமுகம்

கார்ப்பரேஷன் வங்கி, வீட்டுக் கடனுதவி சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டுக் கடனுதவி சிறப்பு திட்டப்படி, 20 ஆண்டு காலவரையில், ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 8.5 சதவீத வட்டியும், ஐந்து லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும், கடனுக்கு 9.25 சதவீத வட்டியும் விதிக்கப்படும். இத்திட்டத்தில் கடன் வாங்குவோர் செலுத்த வேண்டிய முன்பணமாக, ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 10 சதவீதமும், ஐந்து முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 15 சதவீதமும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இம்மாதம் 17ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை வாங்கும் கடனுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
நன்றி :தினமலர்


போர் மேகம் சூழ்ந்துள்ளதால் சரிகிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளால் இரண்டு நாடுகளுக்கிடையே, பதட்டம் அதிகமாகி வருவதால், பங்குச் சந்தையில் அதன் பாதிப்பு திங்களன்று தெளிவாகத் தெரிந்தது. சந்தையில் பங்குகள் எல்லாம் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, வங்கிப் பங்குகள் அதிகம் கீழே சென்றன. சந்தை 171 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதி நெருங்குவதாலும், லாப நோக்கில் ப்ளு சிப் பங்குகள் விற்கப்பட்டதாலும் நேற்று முன்தினம் சந்தை பெரிய சரிவை சந்தித்தது. சத்யம் கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகி விட்டார் என்ற வதந்தி வரவும், அக்கம்பெனியின் பங்குகள் மேலும் சரிந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான விலை என்ற அளவை எட்டியது. அன்றைய தினம் சந்தை 241 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்றும் இறக்கமாகவே இருந்தது. உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால் இந்தியாவிலும் அதற்கு விதிவிலக்காக இல்லாமல் கீழேயே இருந்தது. மொத்தமாக இந்த வாரத் துவக்கம் பங்குச் சந்தைக்கு ஒரு நஷ்ட வாரமாகவே இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 118 புள்ளிகள் குறைந்து 9,568 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 51 புள்ளிகள் குறைந்து 2,926 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கூடிவந்த கட்டுமானத்துறை, தற்போது, பங்குச் சந்தையில் மிகவும் அடி வாங்கி வருகிறது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும் அளவிற்கு வந்து விட்டன. இது, சந்தையில் வீடுகளின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த செய்திகளால் நேற்று கட்டுமானத் துறையின் பங்குகள் கட்டுமானமே இல்லாமல் கீழே சரிந்தன. குறிப்பாக யுனிடெக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் கீழே சென்றது. கம்பெனிகளில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தொய்வால், கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கியிருக்கும் கடன்களை கட்டுவதில் தாமதமாகலாம். ரிசர்வ் வங்கியின் தற்போதுள்ள விதிகளின் படி, ஒரு கம்பெனி தவணையை 90 நாட்களுக்குள் கட்டாவிடில் அந்த தவணை வராக்கடன் என்று வங்கிகள் வைக்க வேண்டும். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் 90 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலம் என்றும் அதை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் உயரும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அது, வங்கிகளின் லாபத்தை பாதிக்கும்.
கடந்தாண்டில் புதிய வெளியீடுகளில் பலரும் லாபங்கள் சம்பாதித்தனர். 40 ஆயிரம் கோடி ரூபாயை புதிய வெளியீடுகள் மூலம் கம்பெனிகள் திரட்டின. ஆனால், இந்த ஆண்டு நடந்தது என்ன? புதிய வெளியீடுகள் மூலம் பணம் திரட்டவே கம்பெனிகள் பயந்தன. ஏனெனில், சந்தையின் நிலை அப்படி இருந்தது. 2008ல் கம்பெனிகள் புதிய வெளியீடுகள் மூலம் திரட்டிய பணம் 19 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக குறைந்தது. சிட்டி வங்கியின் சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் கம்பெனியை விப்ரோ 127 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் விப்ரோவிற்கு இது குறைவான விலைக்கு கிடைத்த ஒரு கம்பெனி எனக்கூட கூறலாம். ஏனெனில், 500 மில்லியன் ஆர்டர்களுடன் கம்பெனி கிடைத்துள்ளது. அதுவும் வங்கித்துறை சம்பந்தப்பட்ட வேலைகள். விப்ரோ வங்கித் துறையில் ஆழமாக கால்பதிக்க இது மிகவும் உயயோகமாக இருக்கும்.
நாளை எப்படி இருக்கும்? இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளை பொதுவாகவே பல நாடுகளிலும் சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கிறது. ஆதலால், இந்திய சந்தைகள், தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டியிருக்கும். எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சந்தை கரடிகளின் பக்கம் சென்று விட்டதா? இல்லை இன்னும் காளைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று. நிலைமையை சரி செய்ய அரசு, ரிசர்வ் வங்கி மூலமாக இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் அல்லது மேலும் ஏதாவது பேக்கேஜ்களை அறிவிக்கலாம். இவையும் சந்தையை நிலைபெற வைக்க உதவும்.
இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு உயர்வு? இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக கூட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சாதகமாக முடியும் பட்சத்தில் புதிய பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வரலாம். மேலும், வெளிநாட்டு முதலீடு நிறைய உள்ளே வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் உள்ள இந்தியாவில் இன்சூரன்ஸ் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உலகளவில் உள்ள கம்பெனிகள் உணர்ந்துள்ளன. மேலும், போட்டி இருப்பதால் பிரிமியங்கள் குறையும் வாய்ப்புகளும் உள்ளன. சென்டிமென்டாக சமீபகாலமாகவே சந்தை 10,000த்தை தாண்ட நினைக்கும் போது கரடிகள் இழுத்து கீழே தள்ளுவது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, லாப நோக்கில் விற்பவர்கள் அதிகமாகி சந்தை கீழே வந்து விடுகிறது.
நன்றி : தினமலர்


சிமென்ட் விலையை குறைக்க தொழிற்சாலைகள் முடிவு

கலால் வரியை குறைப் பதாக அறிவித்துள்ளதையடுத்து, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் ஆலைகள் முன்வந்துள் ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், சிமென்ட் தேவையும் குறைந்தது. கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி பல துறைகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தது. குறிப்பாக, சிமென்ட் மீது இதுவரை விதிக்கப்பட்ட 12 சதவீத கலால் வரி, 8 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்தது. கலால் வரி குறைப்பு காரணமாக, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் நிறுவனங்கள் முனவந்துள் ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு, நான்கு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, December 24, 2008

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்

அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமலர்


Tuesday, December 23, 2008

பொது தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படலாம் என, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தேர்தல் அறிவிப்பு
களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இப்போது விலையைக் குறைத்தால், கச்சா எண்ணெய் விலை கூடும் போது மீண்டும் விலையைக் கூட்ட முடியாது என்பதால், தற்போதைக்கு விலைக் குறைப்புக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு உயரதிகாரி கூறினார்.
இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. இதன் பின்னும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9.98 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 1.03 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாபம் 11.48 ரூபாய் மற்றும் 2.92 ரூபாயாக உயரும்.இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டருக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 148.38 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
நன்றி : தினமலர்


Sunday, December 21, 2008

பங்குச் சந்தை மெதுவாக மேலெழும்ப காரணம் என்ன?

குறைந்து வரும் பணவீக்கம், வியாழனன்று சந்தை ஜம்மென ஒரு தூக்கு தூக்கிச் சென்றது. வங்கிப் பங்குகள் குறிப்பாக மேலே சென்றன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 9 சதவீதத்திற்கும் மேலாகவும் சென்றது.
வெள்ளியன்று பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்கள் குறைப்பு, பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மேலும், கீழுமாக இருந்த சந்தையை வெள்ளியன்று மேலே தூக்கி நிறுத்தின. வியாழனன்று 361 புள்ளிகளும், வெள்ளியன்று 23 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தை கூடியது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 23 புள்ளிகள் கூடி 10,099 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 16 புள்ளிகள் கூடி 3,077 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தை 10,000 புள்ளிகளுக்கும் மேலாகவும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் மேலாகவும் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.
பரவலாக வாங்குவதும் நடக்கிறது. அதாவது நல்ல பங்குகள், குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற எண்ணத்தில் வாங்குவது தொடர்வதால், சந்தை சிறிது சிறிதாக மேலே செல்கிறது.
புதனன்று 30 சதவீதத்திற்கும் மேலே சரிந்த இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி., கம்பெனியான சத் யம், வியாழனன்று 7 சதவீதம் கூடியது. ஆனால், வெள்ளியன்று 3 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து முடிவடைந்தது. விலைகள் தடாலடியாக குறைந்துள்ளதால், கம்பெனியும் பைபேக் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறது. ஆயிலும், டாலரும்: கச்சா எண் ணெய் பேரலுக்கு 40 டாலர் அளவிலும், டாலர் ரூபாய்க்கு எதிராக 47.37 அளவிலும் வந்து நின்றது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என்று ஒபெக் தெரிவித்தும், விலை கூடுவது போலத் தெரியவில்லை. ஏனெனில், உலக அளவில் உபயோகங்கள் குறைந்துள்ளன. இன் னும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையுமா? இன்னும் ஒரு முறை குறைக்க வாய்ப்புகள் உண்டு என்று தான் பலரும் எதிர்பார்க்கின்றனர். அதிகம் வெளிநாட்டு பண வரவுகள் இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக கூடி வருகிறது. ஏற்றுமதியாளர்கள் குழப்பத் தில் உள்ளனர். டாலர் ஏறி/இறங்குவதால் மனதும் அதுபோல ஏறி/ இறங்குகிறது. இப்படி ஏறி/இறங்குவதால், ஏற்றுமதி கான்ட்ராக்ட்கள் போடும் போது எப்படி விலை குறிப்பிடுவது என்று தெரியாமல் சிறிய ஏற்றுமதியாளர்கள் கவலையடைகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணவீக்கம்12.91 சதவீதம் அளவில் சென்று நின்று எல்லாரையும் மலைக்க வைத்தது. அரசாங்கத்தின் முயற்சிகளாலும், மக்கள் வாங்குவதை தள்ளிப் போட்டதாலும் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் 6.84 அளவில் வந்து நிற்கிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் எல்லாரும் 7 சதவீதம் அளவில் வந்து நிற்கும் என நினைத்தனர். ஆனால், பங்குச் சந்தை 22,000யிலிருந்து பாதிக்கு வந்தது போல பணவீக்கமும் தடலடியாக பாதியளவில் வந்து நிற்கிறது. மக்கள் கைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பெரிய அளவில் பொருட்கள் வாங்குவது ஏதும் நடக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், அது பண வாட்டத்தில் கொண்டு செல்லும். அதாவது பணவீக்கம் மைனசில் இருக்கும். எல்லாரும் அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தால் நாட்டுக்கு நல்லதல்ல. வீட்டுக் கடன் வட்டி குறைந்தது மட்டும் சந்தையை தூக்கி நிறுத்தாது. வீடு விலைகளும் குறைய வேண் டும். கட்டுமானத்துறையின் ஜாம்பவான்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து விலைகளை சிறிது குறைப்பார்களேயானால், வீட்டுச் சந்தை மறுபடி உயிர் பெறும்.
தங்கம் ஏன் கூடுகிறது?: வீடு வாங்க ஓடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தற்போது வெயிட் அண்ட் வாட்ச் என்ற பாலிசியில் இருக்கின்றனர். பணம் எல்லாம் பத்திரமாக பணமாகவோ அல்லது தங்கமாகவோ இருக்கிறது. இது தங்கம் விலை கூடுவதற்கு ஒரு காரணம். இரண்டாவது, இப்போது இருக்கும் சூழ்நிலையில், இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பலரும் கருதுவதாலும். தங்கம் உலகத்தின் பொதுவான நாணயமாயிற்றே. அதாவது, எங்கும் தங்கத்தை கொண்டு சென்று பணமாக்கிக் கொள்ளலாம்.எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) டிசம்பரில் விற்றதை விட வாங்கியது அதிகம்.இது சந்தையை மேலே கொண்டு சென்றதற்கு ஒரு காரணி.பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்களைக் குறைத்துள்ளது. அமெரிக்காவின் ஆட்டோ கம்பெனிகளின் மீட்பு முடிவுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் ரேட் குறைப்பு ஆகியவை, சந்தையின் அடுத்த வாரப் போக்கை நிர்ணயிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வட்டி குறைப்பு

பொதுத்துறை வங்கிகளை அடுத்து எல்.ஐ.சி., வீட்டுக்கடன் நிறுவனமும் வட்டி குறைப்பு செய்துள்ளது. இது பற்றி, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.ஆர்.நாயர் தெரிவித்துள்ளதாவது: மொத்தம் 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீதமாகவும், அடுத்து வரும் ஆண்டு களுக்கு 9.75 சதவீதமாகவும் இருக்கும். 20 லட்சத்திற்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு, 11.50 சதவீதத்தில் இருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப் பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு, முன் கூட்டியே கடனை திருப்பி செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதத்திற்கு விலக்கு போன்ற சலுகைகளும் உண்டு. இவ்வாறு நாயர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


எரிபொருள் விலை வீழ்ச்சி : விமான கட்டணம் குறைகிறது

விமான எரிபொருளின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், விரைவில் விமான கட்டணமும் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, விமான எரிபொருளின் விலையும் கடந்த 36 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதையடுத்து, கடுமையாக உயர்த்தப்பட்ட விமான கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், விமான கட்டணம் குறைப்பு குறித்து, விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
விமான எரிபொருளுக்கான விலை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளது. இதன் பலன், சாதாரண பயணிகளுக்கும் கிடைக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம், இன்னும் சில நாட்களில் கட்டணத்தை குறைப்பது குறித்து அறிவிக்கும். இதையடுத்து, தனியார் விமான நிறுவனங்களும் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Saturday, December 20, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 36 டாலராக குறைந்தது

வியாழன் அன்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் மேல் குறைந்து, பேரலுக்கு 36 டாலராக குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போய், டீலர்களிடம் ஏராளமான கார்கள் விற்காமல் தேங்கி இருப்பதால், அங்குள்ள கார் கம்பெனிகளுக்கு இன்வென்ட்ரி நஷ்டம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கார்களின் விற்பனை குறைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் குறைந்து, அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. ஓபக் அமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்போம் என்று சொன்னதும் கூட விலை குறைவதை தடுக்க முடியவில்லை. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 35.98 டாலர் வரை குறைந்து பின்னர் 36.22 டாலரில் முடிந்திருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 43.92 டாலராக இருந்தது. சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் இன்னும் சரியாகவில்லையாதலால், பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்டும் அதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டுதான் இருக்கும் என்று இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல்

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் இன்றும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலேயே இருக்கிறது. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக உயராமலும் குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 23.48 புள்ளிகள் ( 0.23 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,099.91 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 16.75 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 3,077.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, கேப்பிடல் குட்ஸ், பவர், மெட்டல், டெலிகாம் பங்குகள் உயர்ந்திருந்தன. ஓ.என்.ஜி.சி., கெய்ர்ன் இந்தியா, சத்யம், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில வங்கி பங்குகள் பெருளவில் விற்கப்படவும் செய்தன. பணவீக்கம் எதிர்பாராத அளவை விட குறைந்திருப்பதை அடுத்து, வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்ததால், ரியல் எஸ்டேட், ஆட்டோ, இன்ஃரா பங்குகள் நல்ல விலைக்கு போயின. பேங்கிங் பங்குகளும் உயர்ந்திருந்தன. இருந்தாலும் றஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் கொஞ்சம் சரிவில்தான் முடிந்திருக்கின்றன. ஆசியாவை பொருத்தவரை கூடியும் குறைந்தும் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Friday, December 19, 2008

கேடர் பில்லர் நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடு

கேடர் பில்லர் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தை 800 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை சேர்ந்த கேடர் பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனம். இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்தியாவில், பெருமளவில் முதலீடுகள் செய்துள்ள கேடர் பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின்உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் இன்ஜின் தயாரிப்புப் பிரிவுகள் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைத்துள்ளன. அவற்றுள் 2,400 பேர் நேரடியாகவும், 7,500 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்நிறுவனம், தற்போது 800 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரகப் பொறியியல் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மற்றும் ஓசூரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் வழங்கக் கூடிய இப்புதிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலர் பரூக்கி, கேடர் பில்லர் இந்தியா நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆர்.தீனமேன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன் மற்றும் கேடர் பில்லர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


'வட்டி வீதம் மேலும் குறையும்'

பணவீக்கம் குறைந்துள்ளதால் வட்டி வீதம் மேலும் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அசோக் சாவ்லா கூறியதாவது: பணவீக்கம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால், வட்டி வீதமும் குறையும். டிசம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு வாரமாக பணவீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால், ரிசர்வ் வங்கி இதைக் கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின், மூன்று லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது. இவ்வாறு அசோக் சாவ்லா கூறினார்.
நன்றி : தினமலர்


Thursday, December 18, 2008

சரிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மெட்டல், டெலிகாம்,பவர், கேப்பிடல் குட்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதாலும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வேகமாக குறைந்து போனதாலும் சென்செக்ஸ் சரிந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருந்தாலும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கி விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க பங்கு சந்தைகளின் வீழ்ச்சிதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சென்செக்ஸ் 9,682.91 புள்ளிகள் வரை இறங்கி வந்தாலும் வர்த்தக முடிவில் 261.69 புள்ளிகள் ( 2.62 சதவீதம் ) குறைந்து 9,715.29 புள்ளிகளில் முடிந்திருந்தது. நிப்டி 2,943.50 புள்ளிகள் வரை இறங்கி இருந்தாலும் வர்த்தக முடிவில் 87.40 புள்ளிகள் ( 2.87 சதவீதம் ) குறைந்து 2,954.35 புள்ளிகளில் முடிந்திருந்தது.தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக அசையாமல் இருந்த மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்று ஆட்டம் க்ண்டு விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சத்யம், பெல், எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃரா ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்திருந்தன. இன்று அதிகம் பாதிக்கப்பட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். 30.22 சதவீத மதிப்பை அது இழந்திருந்தது. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி.,ஹெச்.யு.எல், ஹெச்.டி.எப்.சி.பேங்க், கிராசிம், விப்ரோ பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் : சர்வே

இந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.49 சதவீதமாகத்தான் இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 10 சதவீதமும் டீசலின் விலையை 6 சதவீதமும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் என்று 11 பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு சதவீதம் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1.5 சதவீதம் முதல் 2.0 சதவீதம் குறைந்திருக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட ஜூன் ஆரம்பத்தில் இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. பின்னர் அது அதிகபட்சமாக ஆகஸ்ட் 2 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


மேடாஸ் நிறுவனங்களை வாங்கிக்கொள்வதை கைவிட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

மேடாஸ் இன்ஃரா மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் இருந்து சத்யம் கம்ப்யூட்ர்ஸ் விலகிக்கொண்டது. முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தையும் மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளையும் 1.6 பில்லியன் டாலருக்கு ( சுமார் 8,235 கோடி ரூபாய் ) வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்ததும், அதன் பங்குதாரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஐ.டி.கம்பெனி, கட்டுமான நிறுவனமான மேடாஸை வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நியுயார்க் பங்கு சந்தையில் அதன் பங்கு மதிப்பு 55 சதவீதம் வரை குறைந்து விட்டது. செவ்வாய்க்கியமை அன்று இந்திய பங்கு சந்தை முடிவடைந்ததும், நலிவடைந்திருக்கும் மேடாஸ் புராபர்டீஸின் எல்லா பங்குகளையும் 1.3 பில்லியன் டாலருக்கும், மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளை 0.3 பில்லியன் டாலருக்கும் வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்தது. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் மேடாஸ் இன்ஃராவில் 36 சதவீத பங்குகளும் மேடாஸ் புராபர்டீஸில் 35 சதவீத பங்குகளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து சத்யம் விலகிக்கொள்வதாக அறிவித்ததும், சரிந்திருந்த அதன் பங்கு மதிப்ப ஓரளவு மீண்டது.
நன்றி : தினமலர்


Wednesday, December 17, 2008

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?: சிதம்பரம் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக குறைந்ததால், இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விலை குறைப்பு போதாது, மேலும் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையையும் குறைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, துணை கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 'கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விலை குறைவு தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார். உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா பதிலளிக்கையில், 'டிசம்பர் 6ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது இடைக்கால நடவடிக்கையே. கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்றார். இம்மாத முற்பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 9.98 ரூபாயும், டீசல் விலையில் 1.03 ரூபாயும் லாபம் சம்பாதித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாப அளவு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11.48 ரூபாயாகவும், டீசலுக்கு 2.92 ரூபாயாகவும் அதிகரிக்கும் என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் 148.38 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நிதியாண்டில், எரிபொருள் விற்பனையில் மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Tuesday, December 16, 2008

வீட்டுக்கடன் வட்டி கிடுகிடு குறைப்பு * நடுத்தர மக்களை கவர சலுகை! வங்கிகள் அதிரடி

வீட்டுக் கடன்களுக்கான வட்டியை கணிசமாகக் குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.5 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அத்துடன், சில வங்கி நடைமுறை கட்டணச் சலுகைகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இது, நடுத்தர மக்கள் வீடு வாங்க ஆர்வத்தைத் தூண்டும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் திடீரென பூதாகர வளர்ச்சி பெற்றது. நிலம் வாங்குவதும், வீடு வாங்குவதும் குதிரைக் கொம்பாக ஆனது. வீட்டுக் கடனுக்கான வட்டி வீதங்கள் வங்கிகளில் அதிகம் இருந்ததால், வீடு வாங்குவது என்பது முடியாத செயல் என்று பலரும் நினைக்கத் துவங்கினர்.தற்போது, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை புத்துயிர் பெறச் செய்ய பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வங்கிகள் வட்டியைக் குறைத்தது : அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் வீட்டுக்கடன் கிடைக்கச் செய்ய மத்திய அரசு, வங்கிகளை வலியுறுத்தி வருகிறது. சமீப காலமாக வீட்டுக் கடன் வட்டியில் நிரந்தர வட்டி, புளோட்டிங் என்று கடன் வாங்கியவர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கினர். இதனால், வங்கிகளில் கடன் வாங்குவது குறையத் துவங்கியது. சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு 11 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வட்டி விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை காரணமாகவும், கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பெரும்பாலான வங்கிகள் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியைக் குறைத்தது. தற்போது, பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை மேலும் குறைத்து, ஏழை நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் வழி செய்ய வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், சில பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.குறிப்பாக, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி குறைப்பு சலுகைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.சலுகை: இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின்(ஐ.பி.ஏ.,) கூட்டம், நேற்று மும்பையில் நடந்தது. இதன் தலைவரான டி.எஸ்.நாராயணசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும் ஸ்டேட் பாங்க் தலைவர் ஓ.பி.பட், நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி 9.25 சதவீதமாக இருக்கும். இந்த இரண்டு வட்டி வீதங்களும் ஐந்து ஆண்டு காலத்திற்கானது. கண்டிப்பாக இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது.இது, அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரூ.20 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் இனிமேல் பிராசசிங் கட்டணம், பிரீ-பேமன்ட் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டியது இல்லை.வீட்டுக் கடனுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்படும்.வீட்டுக் கடன் வழங்குவதில் மாற்றம் செய்யவும், சலுகைகள் வழங்கும்படியும் மத்திய அரசு கடந்த 7ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை இந்திய வங்கிகள் சங்கம் எடுத்துள்ளது.மேலும், வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம் கடன் பெறுபவர்களுக்கு வங்கிக்கு முன்பணமாக 10 சதவீதமும், ஐந்து லட்சத்திற்கு மேல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள் முன்பணமாக 15 சதவீதமும் செலுத்த வேண்டும்.வீட்டுக் கடன் குறைப்பு, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் மற்றும் புதிய கடன் ஆகியவற்றுக்கான வட்டியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையால் இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி கட்ட, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு பட் கூறினார்.
மகிழ்ச்சியா ? ஏமாற்றமா ? : வங்கிகளின் இந்த முடிவை, வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்கள் ஆட்சேபித்துள்ளன.ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமாக உள்ள டி.எல்.எப்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் தல்வார் கூறுகையில், "வட்டி வீதங்கள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன. இது, 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால் சூப்பர் மெட்ரோ, மெட்ரோ, முதல் தர நகரங்களில் வசிப்பவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை' என்றார்.பாரஸ்வநாத் டெவலப்பர்ஸ் சேர்மன் பிரதீப் கூறுகையில், "நாங்கள் வட்டி குறைப்பு மேலும் அதிகமிருக்கும் என எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. முன்பணத்தின் அளவைக் குறைத்திருப்பதும், பிராசசிங் கட்டணம் ரத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
நன்றி : தினமலர்


Monday, December 15, 2008

நட்சத்திர ஓட்டல்களில் 'ரூம்' கிடைப்பது கஷ்டம்

நட்சத்திர ஓட்டல்களில் தங்க வருவோருக்கு தற்போது அத்தனை எளிதில் ஓட்டல் நிர்வாகம் அறைகளை கொடுப்பது இல்லை. பல்வேறு விசாரணைகளுக்கு பிறகே தரப்படுகின்றன. அதேபோல், அறைகளில் அதிரடி சோதனையும் நடத்தப்படுகிறது. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து, பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. வருவாயில் பெரும்பகுதியை பாதுகாப்புக்காக செலவிடத் துவங்கியுள்ளன. தங்கள் ஊழியர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளையும் கற்றுத் தர முடிவு செய்துள்ளன. யோகா, கராத்தே உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தற்போது, அறைகளை வாடகைக்கு கேட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு வருவோருக்கு அத்தனை எளிதில் அவை கிடைப்பது இல்லை. ஓட்டலில் தங்குவோர் பற்றிய முழு விவரமும் இருந்தால் தான் அறைகள் தரப்படுகின்றன. அலுவலக மற்றும் வீட்டு முகவரி, தொலைபேசி எண், அடையாள அட்டை என அத்தனையும் இருக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதவிர, அனைத்து அறைகளிலும், முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 12, 2008

நிலைமையை சீராக்க ரூ.9,000 கோடி நிதியுதவி

தேசிய வீட்டு வசதி வங்கி(என்.எச்.பி.,) மற்றும் எக்சிம் வங்கிக்கு 9,000 கோடி ரூபாய் வழங்குகிறது ரிசர்வ் வங்கி.இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் கூறும் போது, 'வீட்டு வசதித் துறை
தற்போதைய சூழ்நிலையில் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இதைத் தவிர்க்க, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு 5,000 கோடி ரூபாயும், எக்சிம் வங்கிக்கு 4,000 கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இம்முடிவை ரிசர்வ் வங்கி மத்தியக் குழு எடுத்தது' என்றார்.மேலும் அவர், அடுத்த இரு ஆண்டுகளுக்கு நிதி நெருக்கடி சூழ்நிலை தொடரும் என்று கூறியதுடன், மொத்த வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 8 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பணவீக்கம் நடப்பு வாரத்தில் 8 சதவீதமாகக் குறைந்தது.மேலும், ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த
ஊக்குவிப்பு நடவடிக்கை காரணமாக வட்டி வீதம் குறையும் என்று முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் நேற்று மும்பையில் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, December 10, 2008

கார்களின் விலை ரூ.76,000 வரை குறைகிறது

கார் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த எஸ்சைஸ் டூட்டியில் 4 சதவீதத்தை குறைப்பதாக மத்திய அரசு ஞாயிறு அன்று அறிவித்ததையடுத்து, கார்களின் விலையை ரூ.6,000 இலிருந்து ரூ.76,000 வரை குறைக்கப்படுவதாக கார் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாருதி சுசுகி 800 இன் விலையை ரூ.6,000 குறைக்கப்படுவதாக அந்த கம்பெனி அறிவித்திருக்கிறது. அதன் எஸ்.எக்ஸ்.4 மற்றும் டிசையர் மாடலின் விலை ரூ.20,000 குறைகிறது. ஆல்டோ, வேகன் ஆர், மற்றும் ஜென் ஆகிய மாடல்கள் ரூ.9,000 முதல் ரூ.17,000 வரை குறைகிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் மாடலின் விலையும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு சென்வாட்டை 4 சதவீதம் குறைத்திருப்பதால் கமர்சியல் வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் விலை குறையும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் பர்கவா தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் கார்களின் விலையை ரூ.8,000 முதல் ரூ.22,000 வரை குறைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் ரூ.8,800 முதல் ரூ.44,700 வரை விலையை குறைக்கிறது. மாடல்களை பொருத்து விலை குறைக்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த சேக்ஸ்சேனா தெரிவித்தார். டொயோட்டா கார்களின் விலை ரூ.33,000 முதல் ரூ.76,000 வரை குறைக்கப்படுகிறது. மிட்சுபிஷியின் விலை ரூ.25,000 குறைகிறது.கமர்சியல் வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட், அதன் டிரக் விலையை ரூ.32,000 இலிருந்து ரூ.35,000 வரை குறைக்கிறது. இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் விரைவில் விலை குறைப்பை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


8,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது சோனி

பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான சோனி, அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தினரை ( 8,000 பேர் ) குறைக்க திட்டமிட்டிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சோனி, இதன் மூலம் 1.1 பில்லியன் டாலர்களை ( சுமார் 5,390 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. மோசமான நிலையில் இருக்கும் அதன் எலக்ட்ரானிக் துறையில்தான் ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள். உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, ஆசிய நிறுவனம் ஒன்று 8,000 ஊயியர்களை வேலையில் இருந்து நீக்குவது இதுவே முதல்முறை என்கிறார்கள். போர்டபில் மியூசிக் துறையில் ஆப்பில் ' ஐபாட் ' உடன் போட்டி போட முடியாமல் பின்தங்கிய சோனி, ஃபிளாட் பேனல் டி.வி. விற்பனையிலும் பின்தங்கி விட்டது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட சோனி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் 70 சதவீதம் குறைந்திருக்கிறது. இப்போது சோனி 8,000 பேரை வேலையில் இருந்து அனுப்பினாலும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் நிறுவனங்களில் 1,86,000 ஊழியர்கள் வேலையில் இருப்பார்கள். ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைப்பதன் மூலம், அதன் 57 தயாரிப்பு கூடத்தில் 30 சதவீத தயாரிப்பை குறைக்க சோனி முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஜப்பான் பொருளாதாரம்

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கையை பார்த்ததும் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது நன்றாக தெரிந்து விடும். அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானில், எதிர்பார்த்ததை விட பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் குறைந்து விட்டதாலும் அந்நாட்டு கரன்சியான யென் னின் மதிப்பு பெருமளவு உயர்ந்து விட்டதாலும் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. நிறைய ஊழியர்கள் லே - ஆப் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டு பொருளாதாரம் மோசமாகிக் கொண்டுதான் வந்திருக்கிறது. அங்குள்ள பல சிறிய கம்பெனிகள் ஒவ்வொன்றாக திவாலாகிக்கொண்டிருக்கின்றன. சோனி, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் கடும் நிதி சிக்கலில் திணறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள். இப்போதைக்கு பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பெல்லாம் எப்போது ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதுதான்.
நன்றி : தினமலர்


Tuesday, December 9, 2008

வேறு தொழில் தேடும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள்

நிலத்தின் மதிப்பு உயர்வு, பொருளாதார சிக்கல், கடனுக்கான வட்டி உயர்வு உள்ளிட்டவை, ரியல் எஸ்டேட் துறையை தற்போது புரட்டி போட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உச்சத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த இத்துறை, தற்போது சரிவை கண்டுள்ளது.
நிலங்கள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சரிந்து, பல புரோக்கர்கள் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக, ஒருவர் தன்னுடைய நிலம், வீடு எதுவாக இருந்தாலும் நேரடியாக விற்பதை விட புரோக்கர்கள் மூலம் எளிதாக விற்க முடியும் என்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. சென்னை நகரில் ஐ.டி., நிறுவனங்கள் கால் பதித்த காலம் அது.
நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் புரோக்கர்கள், தாங்கள் வைத்தது தான் விலை என்ற அளவில் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலங்களின் விற்பனை கனஜோராக நடந்ததுடன், நிலங்களின் மதிப்பும் உயரத்துவங்கியது. நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட புரோக்கர்கள், அதிக ஆசையில் ஆங்காங்கே விற் பனைக்கு உள்ள நில உரிமையாளர்களை அணுகி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து, தாங்களே நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்து, சந்தை விலையை அதிகரிக்கத் துவங்கினர். இதனால், ஒரு கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலங் கள் எல்லாம், குறுகிய காலத்தில் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டன. முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதிகளவில் களமிறங் கினர். இதில் கிடைத்த லாபத்தைப் பார்த்த பலர், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்கு வந்தனர். சென்னையை தொடர்ந்து, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் எல்லை தாண்டி புரோக்கர்கள் நெட்ஒர்க் விரிந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தே ஐ.டி., தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள், ஊழியர்களை வெளியில் அனுப்பத் துவங்கின. அதே நேரம், ஐ.டி., நிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களை நம்பி லோன் மேளாக்களை நடத்திய வங்கிகள், வட்டி வீதத்தை உயர்த்த ஆரம்பித்தன. இதனால், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்று வந்தவர்கள் வீடோ, நிலமோ வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி துவங்கியது. இந்த வீழ்ச்சி அலையில், புரோக்கர் தொழிலில் நீண்ட நாட்களாக இருப்பவர்கள் தாக்கு பிடித்தனர். மற்றவர்கள், இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். நிலத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டவர்கள், குறிப்பிட்ட காலம் முடிந்ததால் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், தொழிலைத் தொடர முடியாமல் நொடித்துப்போயுள்ளனர். தங்களது சொந்த ஊர்களில் பல்வேறு தொழில்களை பார்த்துவந்த நிலையில் புரோக்கர் தொழிலில் ஆர்வத்துடன் இறங்கியவர்களில் பலர், 'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை'யாக, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து, தென்சென்னை பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் கூறுகையில், ''இப்போது சென்னையில் பல இடங்களில் நிலங்களை விற்க முடியாமல் உரிமையாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லத் துவங்கிவிட்டனர். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதால் ஏற்பட்ட நஷ்டம் தான் இதற்கு காரணம்,'' என்றார். - நமது சிறப்பு நிருபர் -

நன்றி : தினமலர்


Sunday, December 7, 2008

பங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது

வெள்ளியன்று மறுபடி சந்தை 9,000க்கும் கீழே சென்று முடிவடைந்திருக்கிறது. முழம் ஏறி சாண் வழுக்கினால் பரவாயில்லை. சந்தையில் இப்போதெல்லாம் சாண் ஏறி முழம் வழுக்குகிறது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 482 புள்ளிகள் வரை மேலே சென்றது. வெள்ளியன்று அதற்கு நேர்மாறாக அதற்கு பாதியளவு சரிந்தது. மும்பை பங்குச் சந்தை 265 புள்ளிகள் குறைந்து 9,000க்கும் கீழே வந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,965 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,714 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பணவீக்கம் இந்த வாரம் 8.4 சதவீதமாக முடிவடைந்திருக்கிறது. சென்ற வாரம் 8.84 சதவீதமாக இருந்தது. நல்ல இறக்கம் தான். ஆனால், சந்தையில் வெள்ளியன்றும் அது பரிணமிக்கவில்லை. வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த நல்ல செய்தி, பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயும் குறையவுள்ளது. பெட்ரோல் விலை 10 ரூபாய் அளவு குறையும் என்று எதிர்பார்த்தன. குறைவு குறைவாக இருக்கிறது. ஆதலால், சந்தை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 147 டாலராக உச்ச பட்சமாக இருந்தது, தற்போது 44 டாலர் அளவில் வந்துள்ளது. கிட்டத்தட்ட 66 சதவீத தள்ளுபடியில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலையோ 10 சதவீதம் அளவு தான் குறைக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் வரும் ஆண்டில் ஆள் எடுப்பதைக் குறைக்கும் என்று செய்தி வந்தவுடன், அது சந்தையில் சாப்ட்வேர் பங்குகளை ஒரு இறக்கு இறக்கிப் பார்த்தது வெள்ளியன்று. ஏனெனில், இன்போசிஸ் இந்த முடிவை எடுத்தால், மற்ற கம்பெனிகளுக்கும் அதே போலத்தானே இருக்கும் என்ற முடிவுக்கு சந்தை வந்தது. அது, சந்தையை அசைத்துப் பார்த்தது. இது தவிர, வெள்ளியன்று வங்கிப் பங்குகளும், கட்டுமானத்துறை பங்குகளும் குறைந்தன. மும்பையில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாதது ஒரு பெரிய நிம்மதி. வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்? எல்லாரும் தற்போது எதிர்பார்ப்பது சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 200 புள்ளிகளும், 125 புள்ளிகளும் குறைக்கலாம் என்பது தான். அப்படி குறைக்கப்பட்டால், சந்தையில் குறைந்து வரும் பணவீக்கம், பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவைகளை வைத்து திங்களன்று மேலே செல்லும். வரும் 12ம் தேதி இண்டஸ்டிரியல் டேட்டா புள்ளிவிவரம் வரவுள்ளது. அது ஒரு முக்கிய நிகழ்வாகும். அதைப் பொறுத்தும் சந்தையில் மாற்றங்கள் இருக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


வீட்டுக்கடன் வட்டி குறையும்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், சுணக்கம் கண்டுள்ள உற்பத்தித் துறை மீண்டும் உற்சாகமடைவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்புக்கு நிதித்துறை வந்ததும், பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களுக்கும், வங்கிகளிடம் இருந்து பெறும் குறைந்த கால டிபாசிட்களுக்குமான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கால டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு கூடுதல் நிதிவசதி கிடைக்கும். தாராளமாக கடன் கொடுக்க முடியும். கடன்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இது டிசம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். சமீப காலமாக உற்பத்தித் துறை முடக்கம் கண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிட்கோவுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி மறுநிதி அளிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், வங்கிகளின் நிதி இருப்பு விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தாமல், தற்போது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் கூறியதாவது; ''பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து, தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும் என்று நம்புகிறோம். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நிலையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்,'' என்று கூறினார். வட்டிவிகித குறைப்பைத் தவிர, சில குறிப்பிட்ட வங்கிகள், அன்னிய செலாவணி மாற்று பாண்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள் ளது. இந்த பாண்டுகள், கவர்ச்சிகரமான கட்டணத்தில் இருப்பதால், வங்கிகள் இதனால் பலன் பெறும். சர்வதேச நிதி நெருக்கடியால் பண பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கும்.
நன்றி : தினமலர்


Saturday, December 6, 2008

கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது. மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், 'இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது: வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்க பலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். உடனிருந்த அதிபர் மெட்வேதவ், 'இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார். இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.
நன்றி ; தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறையும்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 1,125 ரூபாய் அளவிற்கு வரும் என்றும், அடுத்தாண்டின் பாதிக்கு மேல் தான் சரிவில் இருந்து மீளும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
அமெரிக்க வங்கியைச் சார்ந்த மெரில் லிஞ்ச் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்தாண்டின் பின்பகுதியில் தான் கச்சா எண்ணெய் விலை ஏற துவங்கும். பொருளாதார நெருக்கடியால், அதிகமாக எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் எண்ணெய் தேவை குறைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்துள் ளது. சீனா மற்றும் 'ஓபெக்' அல்லாத நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, கச்சா எண்ணெய் தற்காலிகமாக பேரல் ஒன்றுக்கு 25 அமெரிக்க டாலர் (1,125 ரூபாய்) அளவிற்கு வீழ்ச்சி காணும். 2009ம் ஆண்டு முதல் காலாண்டின் இறுதி மற்றும் இரண்டாம் காலாண்டில் இந்த விலை சரிவு ஏற்படும். இரண்டாம் காலாண்டிற்கு பின் மீண்டும் விலை அதிகரிக்க துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 5, 2008

வீட்டு கடன் வட்டி விகிதம் குறையும்

ஆட்டோ மொபைல் துறையில், பல லட்சக்கணக்கானோர் வேலை இழப்பை தவிர்ப்பதற்காக, வர்த்தக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரி குறைத்து அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரம், வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நிதித்துறையைக் கையில் எடுத்துக் கொண்ட பின், பிரதமர் மன்மோகன் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில், முக்கியமாக கேபினட் செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமையிலான செயலர்கள் கமிட்டி, முக்கிய முடிவுகளை நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து ஆலோசித்ததால், இன்று கடன் வட்டிவிகித அளவு குறைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டும், 65 பேர் வேலையிழந்தது குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. தற்போது உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுவிடும். அதே நேரத்தில், குறைந்த கால கடன்களுக்கான வட்டி விகித்தத்தை ரிசர்வ் வங்கி குறைக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் 2,000 கோடி ரூபாயில் திட்டமும் அறிவிக்கப்பட உள்ளது. நிறுவனங்கள் பணப்புழக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள, விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. வர்த்தக வாகன உற்பத்தி துறையில், உற்பத்தி சரிந்து வருவதைத் தொடர்ந்து, அவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரியில் சலுகை அளிக்கப்பட உள்ளது. தற்போது, பஸ்களுக்கு 12 சதவீதமும், டிரக்குகளுக்கு 14 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் தேவை அதிகரிப்பு இருந்தும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில், ஏற்றுமதியாளர்கள் 12 சதவீத சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தவிர்க்க, நிச்சயம் சலுகை அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Thursday, December 4, 2008

நெட்ஒர்க் கிடைப்பதில் சிக்கல்

சில தினங்களாக, ஏர்டெல் மொபைல் போன் நெட்ஒர்க் சரியாகக் கிடைக்காததால், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் தனது டவர்களை நிறுவி, ஏர்டெல் நிறுவனம் தனது நெட்ஒர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பான்மை மக்கள், ஏர்டெல் நிறுவனத்தின் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு இணைப்புகளைப் பெற்றுள்ளனர். சில தினங்களாக, சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் இணைப்பு பெற்றவர்கள் உள்ளூரிலும், வெளியூர்களுக்கும் பேசும்போது சரியாக நெட்ஒர்க் கிடைக்கவில்லை என்றும், இணைப்பு கிடைத்து பேசத் துவங்கும்போது, இணைப்பு துண்டிக்கப் படுவதாகவும், பேசுபவர்களில் ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு கிடைக்காமல் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். சமீபத்தில், மழை பெய்த பின், இப்பிரச்னை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 'சி.யு.ஜி.,' திட்டத்தின் கீழ் வரும் இணைப்புகளுக்கு இடையில் பேசும்போது பல நேரங்களில் இணைப் பே கிடைப்பதில்லை என்றும், எதிர்முனையில், போனை பயன்படுத்தாத நிலையிலும், 'நெட்ஒர்க் பிசி அல்லது போன் சுவிட்ச் ஆப்' என்று வருவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, ஏர்டெல் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, ''இதுபோன்ற புகார்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை, குறிப்பிட்டு வரவில்லை. சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார்கள் வரும்போது, அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள டவர்களில் ' பூஸ்டர்கள்' அமைத்து சரி செய்துவிடுவோம். ''தற்போதுள்ள சூழலில் நெட்ஒர்க்கிலோ, டவர்களிலோ எந்த பிரச்னையும் இல்லை. இது போன்ற நெட்ஒர்க் பிரச்னைகளுக்காக வரும் புகார்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றன,'' என்றார்.
நன்றி : தினமலர்


Wednesday, December 3, 2008

கமர்சியல் சிலிண்டர் விலை ரூ.290 வீழ்ச்சி

கடந்த 1ம் தேதி முதல் கமர்சியல் சிலிண்டர் ஒன்றுக்கு 290 ரூபாய் குறைந்துள்ளது. எனினும் காஸ் ஏஜென்சியினர், விலை குறைக்காமல் பழைய விலைக்கே சிலிண்டர் விற்பனை செய்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, ஆயில் நிறுவனங்கள் மாதம் தோறும் 1ம் தேதி 19.2 கிலோ எடை கொண்ட கமர்சியல் காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிப்பர். இதன் அடிப்படையில், மே மாதம் 1,094 ரூபாயாக இருந்த கமர்சியல் சிலிண்டர், ஜூன் மாதம் 1,172 ரூபாயாகவும், ஜூலையில் 1,231 ரூபாயாகவும், ஆகஸ்டில் 1,250 ரூபாயாகவும் விலை அதிகரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 1,191 ரூபாயாக விலைக் குறைந்த கமர்சியல் சிலிண்டர், அக்டோபர் மாதம் 1,226 ஆகவும், நவம்பர் மாதம் 1,238 ஆகவும் என மீண்டும் விலை அதிகரித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 47 டாலராக சரிந்துள்ளதைத் தொடர்ந்து, கமர்சியல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. எனவே, நேற்று முன்தினம் ரூ.949.95 ஆக விலைக் குறைப்பு செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.288.90 குறைந்தது வியாபாரிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், காஸ் ஏஜென்சிகள் தாங்கள் 'ஸ்டாக்' வைத்துள்ள கமர்சியல் சிலிண்டர்களை விலைக் குறைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு சிலிண்டரை 290 ரூபாய் நஷ்டத்திற்கு விற்க விரும்பாத பெரும்பாலான ஏஜென்சிகள், 'விலைக் குறைப்பு உத்தரவு எங்களுக்கு வரவில்லை' என கூறி, பழைய விலைக்கே சிலிண்டர்களை விற்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் சண்முகராஜா கூறுகையில், 'ஆயில் நிறுவனங்கள், பெட்ரோல், காஸ் விலையை உயர்த்தினால், அதற் கேற்ப விலையை உயர்த்தி விடுகின்றன. விலை குறையும்போது, உத்தரவு எதுவும் வரவில்லை எனக் கூறி, பழைய விலைக்கே சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன என்றார்.
நன்றி : தினமலர்


ஒரு டிக்கெட்டுக்கு ஒன்று இலவசம் : பாரமவுன்ட் ஏர்வேஸ் அறிவிப்பு

விடுமுறை காலச் சலுகையாக, விமான பயணத்தில், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக, தரும் திட்டத்தை, பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரையில் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிர்வாக, மேலாளர் தியாகராஜன் கூறியதாவது: விடுமுறைக்கால சலுகையாக, ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் விமானத்தில் 'எலைட் பிசினஸ் கிளாஸ்' டிக்கெட் ஒன்று வாங்கும்போது, கூடுதலாக 1500 ரூபாய் செலுத்தி இலவசமாக ஒரு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். வரிகள், சர்சார்ஜ் தனி. அடிக்கடி விமானங்களில், பறப்பவர்களுக்காக 'பாரமவுன்ட் ராயல்' என்ற பெயரில் தனிச்சலுகைகள் வழங்குகிறோம். இதில், உறுப்பினரானால் கோல்ப் கிளப்புகள், ரிசார்ட்டுகள் போன்றவற்றின் சேவைகள் பெற்றுத் தரப்படும். இச்சலுகையை பெற விரும்புவோர் தீதீதீ.ணீச்ணூச்ட்ணிதணtச்டிணூதீச்தூண்.ஞிணிட் என்ற வெப்சைட்டில், பதிவு செய்யலாம். மதுரையில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு விமானங்களை சென்னைக்கு இயக்குகிறோம். இது தவிர, மதுரையில் இருந்து கோவா, ஆமதாபாத், புனே செல்லவும் தொடர்பு விமான வசதிகளை தருகிறோம். எங்கள் சேவைக்கு போட்டி இருப்பதாக கருதவில்லை. தென்னிந்திய விமான பயணிகளில் 26 சதவீதம் பேர் எங்களது வாடிக்கையாளர்கள். விமான பெட்ரோல் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை பயணிகளுக்கு தருவது பற்றி பரிசீலிக்கப்படும். மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்த பிறகு, 2011 முதல் வெளிநாட்டு விமானங்களை இயக்குவோம். இதற்கு எங்களிடம் உள்ள 'எம்பரெர்' ரக விமனங்கள் பொருத்தமாக இருக்கும். மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் விமான பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் பாதிப்பு இல்லை. இவ்வாறு மேலாளர் கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, December 2, 2008

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க 'ஒபெக்' முடிவு

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஒபெக்), இந்த மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அப்துல்லா சலீம் எல்-பத்ரி கூறியதாவது: எண்ணெய் கையிருப்பு அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வரும் சூழ்நிலையில், உற்பத்தியை குறைப்பதே சரியான நடவடிக்கை என தெரிகிறது. இதனால், இம்மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு உற்பத்தி குறைக்கப்படும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. அடுத்தாண்டு முதல் ஆறு மாதங்கள் வரை கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அப்துல்லா சலீம் கூறினார்.
நன்றி : தினமலர்


இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு

மும்பையில், பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை அடுத்து இரண்டு நாள் வர்த்தக இழப்பு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய். சுற்றுலா பயணிகள் வருகை, ஓட்டல்கள் உட்பட பல்வேறு வகையில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மூன்று நாள் நகரமே முடங்கிய நிலையில், பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. புதன் கிழமை இரவு , பயங்கரவாதிகள் அட்டாசம் ஆரம்பித்தது. அன்றும், மறுநாளும் சேர்த்து மட்டும், பங்குச்சந்தை, வர்த்தகம் ஆகியவற்றை கணக்கிட்டால், 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக தரப்பில் மேலோட்டமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாளில், அதிரடிப்படையினர் முற்றுகை,கடைகள், நிறுவனங்கள் மூடல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றை கணக்கிட்டால், இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த நாட்களில் பங்குச்சந்தை மூடப் பட்டிருந்தது. நிதி நிறுவனங்களும் செயல்படவில்லை.மும்பையில் உள்ள 20 தியேட்டர்கள், 75 மல்டிப்ளக்ஸ்களில் ஒரு நாள் டிக்கெட் வசூல் இரண்டு லட்சம் ரூபாய். குளிர்பானங்கள் உட்பட விற்பனையால் தனி வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த பயங்கர நாட்களில் இங்கும் வருவாய் அடியோடு குறைந்து விட்டது. தாஜ், ஓபராய் உட்பட ஓட்டல்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சேத மதிப்புகள் இன்னும் பல கோடிகளை தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், முதல் பத்து வர்த்தக நகரங்களில் மும்பை உள்ளது. இந்தியான் மொத்த உற்பத்தி அளவில் மும்பையின் பங்கு 5 சதவீதம். அன்னிய செலாவணி, வருமான வரி வசூல் மட்டும் 40 சதவீதம், வெளிநாட்டு வர்த்தகம் மூலம் 60 சதவீதம், எக்சைஸ் வரி வசூல் 20 சதவீதம் வருவாயை மும்பை தருகிறது.இது தவிர, வணிக நிறுவனங்கள் மூலம் வரி வருவாயாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. மும்பையின் தனி நபர் வருமானம் , தேசிய தனி மனித வருமானத்தை விட மூன்று மடங்கு. அதாவது, தனி நபர் ஆண்டு வருமானம் 49 ஆயிரம் ரூபாய்.
நன்றி : தினமலர்