Wednesday, July 23, 2008

பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் : பேங்கிங் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன


இந்திய பங்கு சந்தையில் இன்று ஒரு மகத்தான் நாளாக இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ) வெற்றி பெற்றதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. 2008 மார்ச் 25ம் தேதிக்குப்பின் இன்றுதான் ஒரே நாளில் சென்செக்ஸ் இவ்வளவு அதிகம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. ஜூலை 16,2008ல் 12,576 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் எல்லா பங்குகளுமே ஏறி இருந்தது. பெரும்பாலானவர்கள் பேங்கிங், ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், பவர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை சார்ந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காண்பித்தனர். இவைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் மிட் கேப் 5 சதவீதமும், ஸ்மால் கேப் 4 சதவீதமும் உயர்ந்திருந்தது. கடந்த சில காலமாகவே இந்திய அரசியல் ஏற்பட்ட குழப்பம், கச்சா எண்ணெய்யின் கடுமையான விலை உயர்வு, பணவீக்க உயர்வு, ரூபாயின் மதிப்பு மாற்றத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவைகளால் இந்திய சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இப்போது இந்திய அரசியலில் நீடித்த குழப்பம் தீர்ந்து போனது. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. எனவே இனிமேல் பங்கு சந்தையில் நல்ல ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இன்றைய பங்கு சந்தையின் வர்த்தக முடிவில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 838.08 புள்ளிகள் ( 5.94 சதவீதம் ) உயர்ந்து 14,942.28 புள்ளிகளில் முடிந்துள்ளது.( 15 ஆயிரம் புள்ளிகளை எட்ட இன்னும் கொஞ்சம் புள்ளிகளே இருக்கின்றன ). தேசிய பங்கு சந்தையில் நிப்டி 236.70 புள்ளிகள் ( 5.58 சதவீதம் ) உயர்ந்து 4,476.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹெச் டி எஃப் சி வங்கி, டி எல் எஃப், செய்ல், பி என் பி ஆகியவை நல்ல லாபம் பார்த்தன.

நன்றி : தினமலர்


சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா சிமென்ட்ஸ் ரூ.2,100 கோடி முதலீடு


இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், அதன் சிமென்ட் உற்பத்தியை வருடத்திற்கு 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறது. இதனை அதன் இணை தலைவர் - மார்க்கெட்டிங், ராகேஷ் சிங் தெரிவித்தார். இப்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திராவில் 4 தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் 3 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இதன் மூலம் வருடத்திற்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த திட்டமிட்டு ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தென் இந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் 8,000 ஸ்டாக்கிஸ்டுகள் இருக்கிறார்கள். இதில் 30 லிருந்து 35 சதவீதத்தினர் சங்கர் மற்றும் கோரமண்டல் சிமென்ட்டின் பிரத்யேக ஸ்டாக்கிஸ்ட்டாக இருக்கிறார்கள். இந்தியா சிமென்ட்டின் விற்பனையில் ஆறு முதல் ஏழு சதவீதம் வரை, மொத்தமாக வாங்கிக்கொள்பவர்களுக்கும் பெரிய பில்டர்ஸ்களுக்குமே விற்கப்படுகிறது. இவைகள் பெரிய சைஸ் டேங்கர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டு விடுகிறது. மீதிதான் 50 கிலோ கொண்ட பைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


நன்றி : தினமலர்


நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி : பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்


யு.பி.ஏ., அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி பெற்றது ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ), அமெரிக்க பங்கு சந்தையில் நிலவும் ஏற்ற நிலை, கச்சா எண்ணெய் விலை குறைந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் 651.48 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி 196.75 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. பேங்கிங், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், பவர் போன்ற துறைகளின் பங்குகள் உயர்ந்திருந்தன. அதிகம் பயன் அடைந்தது ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, யுனிடெக் மற்றும் டி எல் எஃப் நிறுவனங்கள் தான். ஆசிய சந்தைகளான ஹேங்செங், நிக்கி, ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, தைவான் வெயிட்டட் போன்றவைகள் 1.5 - 3.5 சதவீதம் உயர்ந்திருந்தன. அமெரிக்க சந்தைகளான டௌஜோன்ஸ், நாஸ்டாக் போன்றவையும் உயர்ந்திருந்தது.


நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோ பகுதியை டோல்பி என்ற சூறாவளி தாக்கக்கூடும் என்றும், அதனால் அங்கு இருக்கும் எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் என்றும் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்ற தகவல் இப்போது வந்துள்ளதால், இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரல் ஒன்றுக்கு 23 சென்ட் குறைந்து 128.19 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 25 சென்ட் குறைந்து 129.30 டாலராக இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோ பகுதியில் தான் அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் கால்பங்கு கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. 15 சதவீத இயற்கை எரிவாயுவும் அங்கிருந்துதான் அமெரிக்காவுக்கு கிடைக்கிறது.

நன்றி : தினமலர்


டாலர் மதிப்பு உயர்ந்தும் இழப்பு அதிகரிப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திணறல்

டாலர் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, கடந்த ஆண்டு பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது, டாலர் மதிப்பு உயர்ந்தும், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், மீண்டும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரத்து 500க்கும் அதிகமான நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான பனியன் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிறுவனங்களால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு சர்வதேச ஜவுளி வர்த்தக சந்தையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 46 ரூபாயில் இருந்து 39ஆக குறைந்தது. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ள பனியன் ஏற்றுமதி யாளர்களுடன் போட்டியிட முடியாமல், புதிய 'ஆர்டர்'களை தவிர்க்கும் நிலை அதிகரித்தது. இத னால், ஏற்றுமதி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர் களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது. கடந்த 2007ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது.இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே, டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளதால், வெளிநாடுகளில் புதிய 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்வதில், திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கினர். டாலர் மதிப்பு 39 ரூபாயிலிருந்து 44 வரை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிகட்டுவதுடன், கூடுதல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மூலப்பொருளான நூல் விலை 100 கிலோ கொண்ட கேஸ் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.மின் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உபரி பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, 'பேப்ரிகேஷன்' நிறுவனங்கள் துணி உற்பத்தி கட்டணத்தை 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல், ஸ்கிரீன் பிரின்டிங், காம்பாக்டிங், எம்பிராய்டரிங், ஸ்டீம் காலண்டரிங், அட்டை பெட்டி தயாரிப்பு, சாய ஆலை போன்ற அனைத்து நிறுவனங்களும் 20 முதல் 30 சதவீதம் வரை கூலியை அதிகரித்துள்ளன. ஏற்கனவே, 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்துள்ளதால், நூல் விலை , உபதொழில் கட்டண உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆடை விலையை அதிகரிக்க முடியாது. இதனால், டாலர் மதிப்பு அதிகரித்தும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்


இன்சூரன்ஸ் பிரிமியம் மொபைலில் கட்டலாம் - தனியார் போட்டி அதிகரிப்பு



இன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியத் தொகையை, மொபைல் போன் மூலம் கட்டும் வசதி இப்போது அமலுக்கு வந்துள்ளது; இதனால், தாமதமாக கட்டுவோர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதிகரித்துள்ளதால், வர்த்தகத்தை பெருக்க வாடிக்கையாளர்களுக்கு பல வசதியை ஏற்படுத்த, நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.இந்த வகையில், வாடிக்கையாளர்கள், தங்கள் பாலிசியின் பிரிமியத்தை கடைசி தேதிக்குள் கட்டுவதற்கு வசதியாக புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ருடென்ஷியல் உட்பட சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. அது தான், மொபைல் போன் மூலம் பணத்தை செலுத்தும் வசதி.இன்சூரன்ஸ் துறையில் அதிக வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனம் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி., தான். தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதி கரித்து வந்தாலும், எல்.ஐ.சி., அளவுக்கு இன்னும் வர்த்தகம் அதிகரிக்க வில்லை. ஆனால், எல்.ஐ.சி., உட்பட அரசு நிறுவனங்களை விட, பல மடங்கு வசதிகளை வாடிக்கை யாளர் களுக்கு தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை சமீபத்தில் ஆரம்பித்த ஐ.சி.ஐ.சி.ஐ., துணைத் தலைவர் அனிதா பால் கூறுகையில், 'வாடிக்கை யாளர்களுக்கு பிரிமியம் செலுத்த எல்லா வகையிலும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போது தான் தாமதம் குறையும். அதனால், மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்றார்.மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தனியார் நிறுவனம் மாக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ். கார்ப்பரேஷன் வங்கி டெபிட் கார்டு மூலம் இந்நிறுவன இன்சூரன்ஸ் தொகையை கட்டலாம். அதற்கான வசதி, மொபைல் போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், மொபைல் போன் மூலம் செலுத் தும் வசதியை ஏற்படுத்த பரிசீலித்து வருகிறது. பணம், செக் மூலம் மட்டுமின்றி, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை இந்த நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இதன் தலைமை அதிகாரி மெஹ்ரோத்ரா கூறுகையில்,' எல்.ஐ.சி., போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் 10 சதவீதம் அளவுக்கு தான் புதிய வர்த்தகம் செய்கின்றன. 90 சதவீத வர்த்தகம் ஏற்கனவே உள்ள பாலிசிக்களின் புதுப்பித்தலால் நடக்கிறது. அதனால், சிறிய நிறுவனங்கள், வர்த்தகத்தை பெருக்க, வாடிக்கையாளர்களை பல வகையில் ஈர்க்க வேண்டியுள்ளது' என்றார்.டாடா ஏ.ஐ.ஜி., ஆயுள் காப்பீட்டு நிறுவனம், மத்திய அரசின் தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 5,000 தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் பிரிமியத்தை செலுத்தலாம். இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்தவர்களில் தாமதமாக பணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு க்கு 25 சதவீதமாக உள்ளது. இதைக் குறைத்தால் தான் வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று நம்பு வதால் மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை பல நிறுவனங்கள் ஏற்படுத்தி வரு கின்றன.மொபைல் போனில் இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், இப்போதைக்கு இதற்கு வரவேற்பு சுமாராகத்தான் உள்ளது.




நன்றி : தினமலர்