Thursday, August 28, 2008

பணவீக்கம் உயரும் அபாயம்; சரிவில் முடிந்தது பங்கு சந்தை

பணவீக்கம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 248.45 புள்ளிகள் ( 1.74 சதவீதம் ) குறைந்து 14,048.34 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.10 புள்ளிகள் ( 1.82 சதவீதம் ) குறைந்து 4,214.00 புள்ளிகளில் முடிந்தது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பின்படி இந்தியாவின் பணவீக்கம் 12.63 சதவீதத்தில் இருந்து 12.79 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லியிருந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் பணவீக்கம் 13 சதவீதத்தை விடவும் தாண்டிவிடும் என்று சொன்னார்கள். இதனால் பங்கு சந்தையில் வீழ்ச்சி நிலை காணப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பெல், டி சி எஸ், எல் அண்ட் டி, ஐ சி ஐ சி ஐ பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ என் ஜி சி, டி எல் எஃப் போன்ற நிறுவன பங்குகள் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவை நோக்கி குஸ்டவ் என்ற புயல் நகர்ந்து வருவதை அடுத்து நேற்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளின் எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன. இதனால் நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட்ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.88 டாலர் உயர்ந்து 118.15 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.59 டாலர் உயர்ந்து 116.22 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியை புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அங்கிருக்கும் பிரபல எண்ணெய் நிறுவனமான ராயல் டச் ஷெல், அதன் ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டது. 2005 ம் ஆண்டு அந்த பகுதியை தாக்கிய கட்ரினா மற்றும் ரீடா புயல்கள் தாக்கியதற்கு பின் இப்போதுதான் மிகப் பெரிய குஸ்டவ் புயல் அந்த பகுதியை தாக்க வருவதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


மஜா காணோம்: சந்தை கலகலத்து இருக்கிறது

சந்தை கலகலத்துப் போய் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த மஜா இல்லை. கடந்த வருடம் எல்லாருக்கும் ஒரு ஆச்சரியக்குறியாக இருந்த சந்தை, தற்போது ஒரு கேள்விக்குறியாகப் போய்விட்டது. என்ன ஆகும், எப்போது மேலே செல்லும் என்று எல்லாரையும் யோசனையில் ஆழ்த்திவிட்டு தூங்கச் சென்று விட்டது. திங்களன்று சந்தை துவக் கத்தில் நன்றாக இருந்தாலும், பலரும் லாப நோக்கத் தில் செயல்பட்டதால் கூடிவந்த புள்ளிகள் அனைத்தும் காணாமல் போய், கடைசியாக 48 புள்ளிகளே கூடுதலாக முடிவடைந்தது. நேற்று முன்தினம் துவக் கத்தில் சந்தை கீழே இருந்தாலும், பின்னர் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந் ததும், கச்சா எண் ணெய் விலை குறைந்ததும் சந்தையில் அது பிரதிபலித்தது. ஆதலால், நஷ்டங்கள் குறைந்து சந்தை மேலே வர ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் கூடுதலாக முடிவடைந்தது. பணவீக்கம் 16 வருட உச்சத்தில் உள்ளது. அதைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி மறுபடி வட்டிவிகிதங் களைக் கூட்டலாம் அல்லது சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டலாம் என்று வந்த யூகங்கள் சந்தையை நேற்று அடித்து கீழே விழ வைத்தது என்றால் மிகையாகாது. சமீபகாலமாக அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், பணவீக்கம் குறைவதாகத் தெரியவில் லை. இந்த பயத்திலேயே சந்தை நேற்று கீழே சென்றது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 126 புள்ளிகள் குறைந்து 14,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் குறைந்து 4,292 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 14,000க்கும் கீழே செல்லாமல் இருப்பது தான் தற்போதைய பெரிய ஆறுதல். கீழே செல்லும் பட்சத் தில் மனரீதியாக பலரை கவலைக்குள்ளாக்கும். காரணிகள் என்ன? பணவீக்கம், டாலர் ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய், தங்கம் விலை, அமெரிக்க பங்குச் சந்தை நிலவரம், ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் ஆகியவை பற்றியெல்லாம் முன்பு கவலைப் படாமல் இருந்து வந்தோம். ஆனால், தற்போது இவைகள் தான் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கின்றன என்று தெரியவந்ததும் தினசரி அவை பற்றி தெரிய ஆர்வம் காட்டுகிறோம். டாலரும், ரூபாயும்: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 17 மாதங்களில் மிகக்குறைந்த அளவான 44 ரூபாயையும் தாண்டிச் சென்று இறக்குமதியாளர் களை நேற்று முன்தினம் மிகவும் கவலையடைய வைத்தது.
இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், ரூபாய் மதிப்பு குறைந்தும் அதிகம் பாதிப்பு அடையமாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் மறுபடி கச்சா எண்ணெய் பேரலுக்கு 140 டாலர் அளவைத் தாண்டினால் அது நிச்சயம் எல்லாரையும் பாதிக்கும். சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் மதிப்பு குறைவது ஒரு நல்ல சந்தர்ப் பம். வருங்காலங்களில் அவர் களின் லாபங்கள் கூடும் வாய்ப்புகள் உள்ளன. தாமஸ் குக்கும், உரிமை பங்குகளும்: இந்த சந்தையிலும் சிறிது கலங்காமல் இருக்கும் பங்குகளில் ஒன் றான தாமஸ் குக், உரிமைப் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர் பார்க்கப்பட்டிருந்த ஒன்று என்றாலும், உரிமைப் பங்குகள் எந்த விகிதத்தில் வழங் கப்படுகின்றன, எவ்வளவு ரூபாயில் வழங்கப் படுகின்றன என்று இன்னும் அறிவிக்காதபட்சத்திலும் அந்தக் கம்பெனியின் பங்குகள் நேற்று 15 சதவீதம் வரை மேலே சென்றது. இவை முதலீட்டாளர் களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றிருக்கலாம். புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகள் வெளியிட எல் லாரும் துடித்துக் கொண்டிருந்தாலும், சந்தையின் தற் போதைய நிலைமையைப் பார்த்து இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று ஒதுங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை தான். இருந்தாலும், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது புதிய வெளியீடுகளை கொண்டு வருவதில் ஆர்வம் கொண்டு அதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன. சந்தை எப்படி இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் வருவது, உறுதி என்றே கூறலாம். விலையும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக வைக்கும் பட்சத்தில் நன்றாக செலுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தையை உள் நாட்டுப் பிரச்னைகள் தற்சமயம் தாக்குவதில்லை. உலகளவிலான பிரச்னைகள் தான் தாக்குகின்றன. ஆதலால், சந்தைக்கு என்ன ஆகும் என்பது உலகளவில் நடக்கும் விஷயங்களை வைத்தும், நாளை, பணவீக்க சதவீதம் எவ்வளவு இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தும் அமையும்.
சேதுராமன் சாத்தப்பன்