Thursday, October 29, 2009

எல்.ஐ.சி., சட்ட திருத்தம் : ஏஜன்டுகள் கடும் அதிருப்தி

எல்.ஐ.சி., சட்டம் 1938 பிரிவு 44ல், திருத்தம் செய்வதற்காக சமீபத்தில், பார்லிமென்டில் மசோதா சமர்பிக்கப்பட்டது குறித்து, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் குறை கூறி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், இந்திய எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் கூட்டமைப்பு நேற்று முன் தினம், எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் நல்வாழ்வு தொடர் பான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், எல்.ஐ.சி., சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து மண்டல செயலர் டி.சத்யநாராயணா, பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் பலர், பாலிசிகள் மூலம் கிடைக்கும் கமிஷன்களை வைத்தே வாழ்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் கமிஷன்களே அவர்களை சிறப்பாக மேலும் செயலாற்றத் தூண்டுகிறது. இந்த சட்டப்பிரிவு, ஏஜன்ட்கள், உடல்ரீதியாக பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வழி வகை செய்கிறது. இத்தகைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, எல்.ஐ.சி., ஏஜன்ட்களின் பணியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் பெரியளவில் நஷ்டம் ஏற்படும்.

பாலிசிதாரர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று தான் இன்சூரன்ஸ் ஏஜன்ட்கள் பாலிசி எடுக்கின்றனர். அதன் பின், பாலிசிதாரர் முறையாக பாலிசித் தொகையை செலுத்துகிறாரா என்பதை ஏஜன்ட் கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், நாட்டின் இன்சூரன்ஸ் செயல்பாடுகளில் பெரிய பின்னடைவு ஏற்படும்.

நன்றி : தினமலர்