Tuesday, July 22, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் - காங்கிரஸ் வெற்றி

ஆதரவு = 275
எதிர்ப்பு = 256

நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் முடியவில்லை

TRUST VOTE - FOR: 253, AGAINST: 232, PENDING: 54

தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் பங்கு சந்தை


மத்திய அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு இன்று நடக்க இருப்பது எல்லாம் பங்கு சந்தையை பாதித்ததாக தெரியவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் யு.பி.ஏ., அரசு ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பியதால், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே உயர துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை தொடர்ந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.16 புள்ளிகள் ( 1.84 சதவீதம் ) உயர்ந்து 14,104.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.94 சதவீதம் ) உயர்ந்து 4,240.10 புள்ளிகளில் முடிந்தது. சி.என்.பி.சி.- டி.வி.18 எடுத்த கணிப்பின்படி, யு.பி.ஏ., அரசுக்கு ஆதரவாக 268 ஓட்டுகளும் எதிராக 267 ஓட்டுகளும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் பெரிதும் பயன் அடைந்தது செய்ல், பெல், ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள்.

நன்றி : தினமலர்


இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 7 - 8 சதவீதமாக இருக்கும் : சிதம்பரம்


இந்த நிதி ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சிக்கலான ஆண்டாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தாõர். மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது பேசிய சிதம்பரம், என்.டி.ஏ., அரசு பதவியில் இருந்தபோது 5 முதல் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்றார். 2007 - 08ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வருட பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, இதுவரை சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன் ரூ.50,254 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர இன்னும் ரூ.16,233 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு மொத்தம் ரூ.66,477 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் சிதம்பரம். இதனால் 3.64 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார். மேலும் கடந்த வருடம் ரூ.2,50,000 கோடி கடன்கொடுத்திருந்த நிலையில் இந்த வருடம் அது ரூ.2,80,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார்.

நன்றி : தினமலர்


ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது


ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகத்தில், லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 57 சென்ட் குறைந்து 130.47 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 56 சென்ட் குறைந்து 132.05 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் இருக்கும் ஆயில் கிணறு பகுதியை டோல்பி என்ற சூறாவளி லேசாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு வேலையில் இருக்கும் பல தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எக்ஸான் மொபில் கார்பரேஷன், செவ்ரான் கார்பரேஷன், ராயல் டச் ஷெல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் அவர்களது தொழிலாளர்கள் பலரை அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறது. இருந்தாலும் இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்


இனிமேல் கமிஷன் கிடையாது : போராட்டம் நடத்த டிராவல் ஏஜென்டுகள் முடிவு


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்களை எடுத்து கொடுக்க இந்தியா முழுவதும் ஏராளமான டிராவல் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆரம்பத்தில் 9 சதவீதம் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது. அது சமீபத்தில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது அதற்கும் வேட்டு வருகிறது. ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் , ஏர் - இந்தியா ஆகிய விமான கம்பெனிகள் டிராவல் ஏஜென்டுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து உங்களுக்கு கமிஷன் ஏதும் கொடுக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். வெளிநாட்டு விமான கம்பெனிகளான லூப்தான்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகியவையும் இதே போன்று கமிஷன் தரமாட்டோம் என்று கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த விமான கம்பெனிகளுக்கு ரூ.1,000 கோடி வரை மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. விமானங்களை இயக்குவதற்கு அதிகம் செலவாவதாலும், வளர்ச்சி குறைவாக இருப்பதாலும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகி விட்டதாக விமான கம்பெனிகள் தெரிவிக்கின்றன. ஆனால் விமான கம்பெனிகளின் இந்த முடிவை எதிர்த்து இந்தியாவில் இருக்கும் டிராவல் ஏஜென்டுகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து, இந்தியாவில் இருக்கும் சுமார் 4,500 டிராவல் ஏஜென்டுகள் அங்கத்தினர்களாக இருக்கும் மூன்று பெரிய அசொசியேஷன்கள் மும்பையில் கூடி விவாதித்தனர். அதில் ஜூலை 24 ம் தேதி டிராவல் எஜென்ட் அசோசியேஷன் களுக்கும் விமான கம்பெனிகளுக்கும் டில்லியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஒரு சாதகமான முடிவு ஏற்படா விட்டால் இனிமேல் டிக்கெட்டுகளை விற்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயண டிக்கெட்டுகளில் 85 சதவீதம் டிராவல் ஏஜென்டுகள் மூலமாகத்தான் விற்கப்படுகிறது. டிராவல் ஏஜென்டுகள் விமான டிக்கெட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டால் அது விமான பயணிகளை குறிப்பாக வெளிநாடு செல்லும் பயணிகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. டிக்கெட் புக் செய்வது கேன்சல் செய்வது போன்றவைகளில் சிரமங்கள் ஏற்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த டிராவல் ஏஜென்டுகள், ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்போதும் 9 சதவீத கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆகியவைகள் லாபத்தில் இயங்கும்போதும் கூட ஏன் எங்களுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள விமான கம்பெனிகளும் சமீபத்தில் ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டு பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டது.




நன்றி : தினமலர்