Monday, January 11, 2010

தகுதியுள்ளது வாழும்

ஜக்குபாய் திரைப்படம் இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் திரையுலகமே ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோவை இளைஞரையும், திருட்டு டிவிடி தயாரித்த சென்னை நபரையும் கைது செய்துள்ளது. பொங்கல் நேரத்தில் திரைக்கு வரவிருந்த இப்படம் முன்னதாக வெளியாகியிருப்பது மிகவும் மோசமான சூழல் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!

ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.

இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.

"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?

தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!

எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.

அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.

அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி

தமிழ் வெறும் துக்​க​டாவா...?

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​

73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​

இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​ பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​

ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
நன்றி : தினமணி

மொபைல் போன் மூலமான இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவில் மொபைல் போனில் இன்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிரித்து வருகிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் தான் மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வகையில் ஏராளமான நிறுவனங்கள் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளன. இதையடுத்து, மொபைல் போனில் இன்டர் நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்த வண்ணம் உள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைல்போன் கூட்டமைப்பு இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில், 47கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. மொபைல் போன் வைத்துள்ளவர்களில் 20 லட்சம் பேர் இன்டர்நெட் வசதியை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் இளம் வயதினர்.
நன்றி : தினமலர்