Sunday, July 27, 2008

வருண பகவான் கருணை காட்டினால் பங்குச் சந்தை ஒளிரும்


காளைகள் சிறிது ஓய்வெடுத் துள்ளன. அதனால், கரடிகள் மறுபடி எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டன. சந்தையில் இந்த வியாழன், வெள்ளி இறக்கங்கள் எதிர் பார்த்தது தான். அதாவது, சென்ற வாரம் வியாழன் முதல் இந்த வாரம் புதன் வரை சந்தை ஏறிக்கொண்டே சென்றது.
இரண்டு காரணங்கள்: ஒன்று, லாப நோக்கில் பலரும் விற்க ஆரம் பித்தது. இரண்டாவது, சந்தையில் ஜாம்பவான்களின் காலாண்டு முடிவுகள், சந்தை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் காலாண்டு முடிவுகள், சந்தையை வியாழனன்று கீழே இறக்கியது.
ஐ.சி.ஐ.சி.ஐ., முடிவுகள் வரும் சனியன்று வெளிவருகிறது. ஆனால், வெள்ளியன்றே சந்தையில் அதன் பங்குகள் 8 சதவீதம் குறைந்தன. சந்தையில் அந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் சாதகமாக இருக்காது. வாரக்கடன்கள் கூடும், லாபங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பது தான் காரணம்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடியதால் (கிட்டத்தட்ட 70 முதல் 80 பைசா வரை), ஏற்றுமதியாளர்கள் மறுபடி கையை பிசையும் நிலை. சந்தையில் இந்த உயர்வு, குறிப்பாக சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளைப் பாதித்தன.
இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் ஆகிய கம்பெனிகளின் பங்குகள் மிகவும் கீழே தள்ளப்பட்டன. அது வியாழனன்று சந்தையை வெகுவாக பாதித்தது. வியாழனன்று சந்தை 165 புள்ளிகளை இழந்தன.
வெள்ளியன்று இறக்கத்திற்கு காரணம், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிசின் காலாண்டு முடிவுகள் தான். நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 13 சதவீதம் கூடியிருந்தது. சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் 4 சதவீதம் கீழே இறங்கியது. அது சந்தையை வெகுவாக பாதித்தது.
ஆசிய அளவில் லாப நோக்கில் பங்குகள் விற்கப்பட்டதால், பல சந்தைகள் கீழே இறங்கியிருந்தன. அதுவும் சந்தை இறங்கியதற்கு ஒரு காரணம். இறுதியாக மும்பை பங்குச் சந்தை 502 புள்ளிகள் குறைந்து 14,274 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 121 புள்ளிகள் குறைந்து 4,311 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.
பணவீக்கம் எங்குள்ளது?: இந்த வாரம் 11.89 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமான 11.91 சதவீதத்தை தாண்டாது ஒரு ஆறுதல். அதே சமயம் சென்ற ஆண்டு இதே சமயத்தில் பணவீக்கம் 4.76 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், இன்னும் பணவீக்கம் குறைய நிறைய வாய்ப்புள்ளது. மத்தியில் ஓட்டெடுப்பில் காங்கிரஸ ஜெயித்தவுடன், அனில் அம்பானியின் கம்பெனிகளின் பங்குகள் தொடர்ந்து மேலே சென்றன,
தங்கம் ஏன் இறங்குகிறது?: கச்சா எண்ணெய் கூடினால் பணவீக்கம் கூடும், முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடி ஓடுவர். தங்கம் விலை கூடும். ஆனால், தற்போது கச்சா எண்ணெய் மிக அதிகபட்ச விலையிலிருந்து 23 டாலர் வரை பேரலுக்கு குறைந்திருக்கிறது. இதனால், உலகளவில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் குறைந் துள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் அவுன்சுக்கு 50 டாலர் வரை குறைந் துள்ளது. மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடி வருகிறது. ஆதலால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூபாய் 800 வரை 10 கிராமுக்கு குறைந்துள்ளது. வரப்போகும் மாதங்கள் பண்டிகை மாதங்களாகையால் டிமாண்ட் கூடும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தை இந்த வாரம் 15,000ஐ தாண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த மேஜிக் நம்பரை முத்தமிட முயற்சி செய்து தோற்றது. அதிலிருந்து இரண்டு நாட்களும் இறக்கம் தான். மாதக்கடைசியில் ரிசர்வ் வங்கியின் பாலிசி அறிவிப்பு வரவிருக்கிறது. பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்திலேயே இருப் பதால், மறுபடி இன்னும் ஒரு வட்டி கூடுதலாக இருக்கலாம் என்று, அப்படி இருக்குமானால் அது சந்தையைப் பாதிக்கும். குறிப் பாக, வங்கி பங்குகளைப் பாதிக் கும். வானிலை ஆராய்ச்சி மையம், இந்த ஆண்டு நல்ல மழை இருக் கும் என்று கணித்திருந்தது. துவக் கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், கடந்த 15 நாட்களாக மழை இல்லாத ஒரு சூழ்நிலை,
ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள் ளது. குறிப்பாக குஜராத், மகாரஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மழையை எதிர்பார்த்தது போல இல்லை என வரும் அறிக் கைகள், சிறிது பயத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்ந்தால், அது சந்தையைப் பாதிக்கும். சந்தை மேலே செல்ல இதுவரை கச்சா எண்ணெய் பகவானை வேண்டிக் கொண்டிருந்தோம். தற்போது, வருண பகவானையும் வேண்டுவோம்.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


வருமான வரி சிறப்பு கவுன்ட்டர் திறப்பு : ரூ. 23,861 கோடி வசூலிக்க இலக்கு


''இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள வருமான வரி செலுத்துவோர் 2007-08ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி இறுதி நாளாகும். வருமான வரி கணக்குகளை பொதுமக்கள் எளிதாக தாக்கல் செய்யும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் 42 சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புக் கவுன்ட்டர்களை மத்திய வருவாய்த் துறைச் செயலர் பிடே நேற்று துவக்கி வைத்தார். இந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட, வரும் 31ம் தேதி வரை செயல்படும். காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்குளைச் செலுத்துவதற்காகவும், ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கும் சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்குப் படிவங்களை தீதீதீ.டிணஞிணிட்ஞுtச்துடிணஞீடிச்.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்திலிருந்து, 'டவுண்லோடு' செய்து கொள்ளலாம். சிறப்புக் கவுன்ட்டர்கள் குறித்து வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராம கிருஷ்ணன் கூறியதாவது: சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் வருமான வரிக் கணக்குகளைச் செலுத்த சிறப்புக் கவுன்ட்டர்களை அமைத்துள்ளோம். கடந்த ஆண்டு சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். கடந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தம் மூன்று லட்சம் பேர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இது மூன்றரை லட்சமாக உயரும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ. நான்காயிரத்து 261 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


நன்றி : தினமலர்