Sunday, March 1, 2009

தபால் நிலையங்களில் மருந்துகள் விற்பனை

தற்போது, லாபமின்றி செயல்பட்டு வரும் தபால் நிலையங்களின் நிலையை மாற்றுவதற்காக, அவற்றில், மருந்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட் டம் அமலுக்கு கொண்டு வரப் பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது. ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கம்ப் யூட்டர் கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் பரிட்சார்த்த ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால், படிப்படியாக நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட உள்ளது. தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பொருட் கள், மற்ற கடைகளை விட குறைவாக நிர்ணயிக்கப்படும். அதிக லாபமின்றி மருந்து மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற் பனை செய்யப்படுவதால், இத்திட்டம் வெற்றி பெறும் என்று அதிகாரிகளால் கருதப்படுகிறது. தற்போது, கிராம தபால் நிலையங்கள் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. படிப்படியாக வேலை நேரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. விற்பனையின் அடிப்படையில், தபால் நிலைய ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையும், கமிஷனும் வழங்கப்படும். இதனால், இத்திட்டத்தில் தபால் ஊழியர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுத்தவும் முடியும்.
நன்றி : தினமலர்


ரூ.15 விலையில் மின் சிக்கன பல்பு

பாசட் லாம்ப் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 15 ரூபாய் விலையில், மின் சிக்கன பல்புகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சாதாரண பல்பு, 60 வாட் மின்சாரம் செலவிடுகிறது. மின்சிக்கன சி.எப்.எல்., பல்புகள் 12 வாட் மின் சாரத்தை செலவிடுகிறது; தொடர்ந்து 1,200 மணி நேரம் ஒளிவிடக்கூடியது. இது மட்டுமின்றி, சி.பி.எல்., பயன்படுத்துவதன் மூலம், கார்பன் வெளிவிடுவது 50 கிலோ குறைகிறது. கார்பன் வெளியாவதால், உலக வெப்பமயம் அதிகரிக்கிறது. இதை தடுப்பதற்காக கார்பன் மேம்பாட்டு நடவடிக்கையின் கீழ், கார்பன் சேர்க்கை திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மின் சிக்கன சி.எப்.எல்., பல்பு மூலம், கார்பன் சேர்க்கையில் ஆண்டுக்கு 42 ரூபாய் வருவாய் ஏற்படுகிறது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டில்லியில், நடத்தப்பட்ட சர்வதேச கார்பன் சேர்க்கை மாநாட்டில், இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. மத்திய, மாநில, தனியார் கூட்டு முயற்சியின் மூலம் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரணமாக, மின்சிக்கன சி.எப்.எல்., பல்புகள் ரூ.80 மதிப்பு கொண்டவை. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மின் சிக்கன பல்புகள் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மீதித் தொகை, கார்பன் சேர்க்கை மூலம் சரி செய்யப்படும். முதல் கட்டமாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலும், அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பங்கேற்க, டெண்டர் விடப்பட்டது. இதில், 20 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இவற்றில் சில, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்கள்; மற்றவர்கள் சி.எப்.எல்., பல்புகளை கொள்முதல் செய்து மொத்த விற்பனையில் விற்பனை செய்யும் நிறுவனங்கள்.
நன்றி : தினமலர்