Tuesday, December 8, 2009

சிறு தொழில்​க​ளுக்கு எப்​போது விடி​யல்?

சில தினங்​க​ளுக்கு முன்பு,​ செக்​யூ​ரி​டிஸ் ஆண்டு எக்ஸ்​சேஞ்ச் போர்டு ஆஃப் இந்​தியா ​(செபி)​ ஒரு முக்​கி​ய​மான அறி​விப்பு செய்​தி​ருக்​கி​றது. சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு என்று தனி​யா​கப் பங்​குச் சந்தை ஏதும் தேவை​யில்லை. தேசிய பங்​குச் சந்தை மற்​றும் மும்பை பங்​குச் சந்​தை​யி​லேயே அவற்​றை​யும் இனி பட்​டி​யல் செய்​ய​லாம். பங்​கு​கள் பரி​வர்த்​த​னை​யும் செய்​ய​லாம் என்​ப​து​தான் அந்த அறி​விப்​பின் சாரம்.

சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளின் தலை​யாய பிரச்னை என்​பது தங்​க​ளுக்​குத் தேவை​யான மூல​த​னத்​தைத் திரட்​டு​வ​து​தான்.

பெ​ரிய நிறு​வ​னங்​கள் மூல​த​னம் திரட்​டு​வ​தற்கு பங்​குச் சந்​தை​க​ளுக்கு வரு​கின்​றன. அப்​ப​டிப்​பட்ட வாய்ப்பு சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு இது​வரை எட்​டாக்​க​னி​யா​கவே இருக்​கி​றது. கார​ணம்,​ இது​தொ​டர்​பான நடை​மு​றை​க​ளும்,​ அதற்​காக மேற்​கொள்ள வேண்​டிய அப​ரி​மி​த​மான செல​வு​க​ளும் ஆகும்.

உ​தா​ர​ண​மாக,​ ஒரு நிறு​வ​னம் முதல்​மு​றை​யாக தங்​கள் பங்​கு​களை பொது​மக்​க​ளுக்கு விற்​பனை செய்து மூல​த​னம் திரட்​டு​கி​றது என்று வைத்​துக் கொள்​வோம். ​(இது இனி​ஷி​யல் பப்​ளிக் ஆஃ​பர் எனப்

​ப​டு​கி​றது)​. ஒரு கோடி ரூபாய் மூல​த​னம் திரட்​டு​வ​தாக இருந்​தா​லும் சரி,​ அல்​லது நூறு கோடி ரூபாய் மூல​த​னம் திரட்​டு​வ​தாக இருந்​தா​லும் சரி,​ அதற்கு ஆகும் செலவு ஏறக்​கு​றைய ஒன்​று​தான். விளம்

​ப​ரச் செலவு,​ படி​வங்​கள் அச்​ச​டித்து வினி​யோ​கம் செய்​தல்,​ பிர​தி​நி​தி​க​ளின் சுற்​றுப்​ப​ய​ணச் செலவு ஆகி​யவை ஒரே மாதி​ரி​தான் அமை​கி​றது.

இந்த அதீ​த​மான செலவே,​ சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​கள் பங்​குச் சந்​தை​யில் நுழை​வ​தற்​குத் தடைக் கற்​க​ளாக உள்​ளன.

பங்​குச் சந்​தை​யில் லிஸ்ட் செய்​யப்​பட்ட சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​க​ளின் பங்​கு​க​ளைப் பண​மாக்​கு​வ​தற்கு பெரும்​பா​லும் "மெர்ச்​சன்ட் பேங்​கர்ஸ்' எனப்​ப​டும் சிறப்பு நிதி அமைப்​பு​க​ளின் உதவி தேவைப்​ப​டும். அவர்​கள் சிறு தொழில் நிறு​வ​னங்​க​ளின் பங்கு பரி​வர்த்​த​னை​யில் அதிக ஆர்​வம் காட்​டு​வ​தில்லை. அவர்​க​ளுக்​குப் பெரிய நிறு​வ​னங்​க​ளி​ட​மி​ருந்து கிடைக்​கக்​கூ​டிய அளவு அதிக ஊதி​யம் சிறு நிறு​வ​னங்​க​ளி​ட​மி​ருந்து கிடைப்​ப​தில்லை.

இ​வற்​றை​யெல்​லாம் அறிந்​துள்ள "செபி' என்​னும் கண்​கா​ணிப்பு வாரி​யம்,​ சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​கள் பங்​குச் சந்​தை​யில் லிஸ்ட் செய்து கொண்டு பரி​வர்த்​தனை செய்​வ​தற்​கும்,​ மூல​த​னம் திரட்​டு​வ​தற்​கும் வச​தி​யாக,​ விதி​மு​றை​களை எளி​மைப்​ப​டுத்​தி​யுள்​ளது. பத்து கோடி ரூபாய்க்​குக் குறை​யா​ம​லும்,​ இரு​பத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு மிகா​ம​லும் மூல​த​னம் பெற்​றுள்ள சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு மட்​டுமே இப்​பு​திய,​ எளி​மைப்​ப​டுத்​தப்​பட்ட நடை​மு​றை​கள் பொருந்​தும்.

பு​திய ஏற்​பாட்​டின் முக்​கி​யத்​து​வம் என்ன?​ நம் நாட்​டில் 1995 முதல் கணினி மூலம் பங்கு வர்த்​த​கம் செய்​யும் முறை வந்​து​விட்​டது. அதற்கு முன்பு பெரிய நக​ரங்​க​ளில் மட்​டும் அல்​லா​மல்,​ சிறிய,​ சிறிய நக​ரங்​க​ளி​லும் சிறப்​பா​கச் செயல்​பட்டு வந்த பிராந்​திய பங்​குச் சந்​தை​க​ளின் பயன்​பாடு திடீ​ரென குறைந்​து​விட்​டது. அந்த கால​கட்​டத்​தில் வேக​மாக வளர்ந்த பங்கு வர்த்​த​கத்தை தேசிய பங்​குச் சந்​தை​யும்,​ மும்பை பங்​குச் சந்​தை​யும் பகிர்ந்து கொண்​டன.

அ​தே​போல்,​ எல்லா நிறு​வ​னங்​க​ளும் அவற்​றின் பங்​கு​களை தேசி​யப் பங்​குச் சந்​தை​யி​லும்,​ மும்பை பங்​குச் சந்​தை​யி​லும் பட்​டி​யல் இட்​டுக் கொள்ள முடி​யாது. அதற்​குச் சில குறைந்​த​பட்ச தகு​தி​கள் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளன. தேசி​யப் பங்​குச் சந்​தை​யில் ரூ. 10 கோடி மூல​த​னம் அல்​லது சில நிபந்​த​னை​க​ளு​டன் ரூ. 5 கோடி மூல​த​னம் உள்ள நிறு​வ​னங்​கள்​தான் பட்​டிய​லிட முடி​யும். அதே​போல்,​ மும்பை

பங்​குச் சந்​தை​யில் ரூ. 3 கோடி மூல​த​னம் கொண்ட நிறு​வ​னங்​கள் மட்​டுமே பட்​டிய​லிட முடி​யும்.

வி​ரை​வில்,​ இந்​தத் தொகை​கள் மேலும் அதி​க​ரிக்​கப்​பட உள்​ளன. இந்​நி​லை​யில்​தான் செபி​யின் புதிய அறி​விப்பு வெளி​வந்​துள்​ளது. தேசி​யப் பங்​குச் சந்தை மற்​றும் மும்பை பங்​குச் சந்​தை​யில் சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு ஒரு தனி தளம் ​(பிளாட்​ஃ​பார்ம்)​ கொடுத்​து​விட வேண்​டும் என்​பது செபி​யின் யோச​னை​யா​கும். ரூ. 10 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை மூல​த​னம் உள்ள நிறு​வ​னங்​களை புதிய ஏற்​பாட்​டின்​படி பட்​டிய​லி​ட​லாம். அதன்​பி​றகு அந்த நிறு​வ​னப் பங்​கு​களை பொது​மக்​க​ளும்,​ முத​லீட்​டா​ளர்​க​ளும் வாங்​க​லாம்,​ விற்​க​லாம். ​

நம் நாட்​டில் 3 கோடி சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​கள் உள்​ளன. ஆனால் அவற்​றில் லட்​சக்​க​ணக்​கான சிறு தொழில் நிறு​வ​னங்​க​ளின் மூல​த​னம் ரூ. 10 கோடிக்​கும் குறை​வா​கவே இருக்​கி​றது. ஆகவே செபி​யின் புதிய ஏற்​பாடு அவர்​க​ளுக்கு எந்​த​வி​தத்​தி​லும் பயன் அளிக்​காது என்​பது வெளிப்​படை.

அ​தே​போல்,​ பத்து கோடி ரூபாய்க்கு மேல் மூல​த​னம் உள்ள சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​க​ளுக்​கும்,​ புதிய ஏற்​பாட்​டி​னால் பெரிய நன்மை கிடைக்க வழி​யில்லை. கார​ணம்,​ குறைந்​த​பட்​சம் ஒரு லட்ச ரூபாய்க்கு பங்​கு​கள் வாங்க விரும்​பு​ப​வர்​கள் மட்​டுமே இந்​நி​று​வ​னப் பங்​கு​க​ளுக்கு விண்​ணப்​பிக்க முடி​யும். சிறு முத​லீட்​டா​ளர்​க​ளைப் பொருத்​த​வரை இது போகாத ஊருக்கு வழி சொல்​லு​வ​து​போல்​தான்!​

ஆக,​ சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் துறைக்கு உண்​மை​யி​லேயே ஊட்​டச்​சத்து அளிப்​பது அவ​சி​யம். கார​ணம் இந்​திய பொரு​ளா​தா​ரத்​துக்கு அவர்​க​ளது பங்கு கணி​ச​மா​னது. உதா​ர​ண​மாக,​ ஒட்​டு​மொத்த தொழில் உற்​பத்​தி​யில் இத்​து​றை​யின் பங்​க​ளிப்பு 40 சத​வீ​தம்;​ அது​மட்​டு​மல்ல,​ சிறிய மற்​றும் நடுத்​த​ரத் தொழிற்​சா​லை​கள் 30 கோடி பேருக்கு வேலை​வாய்ப்​பு​களை வழங்​கி​யுள்​ளன.

அ​ர​சும் பாரத ரிசர்வ் வங்​கி​யும் செய்ய வேண்​டி​யது இது​தான்:​ அந் நிறு​வ​னங்​கள் பல​கா​ல​மாக கோரி வரும் உத​வியை வழங்​கி​னாலே போதும்.

வங்​கிக் கடன் வழங்​கு​வ​தில் கால​தா​ம​தத்​தைத் தவிர்க்க வேண்​டும். இந்​நி​று​வ​னங்​க​ளுக்கு வழங்​கும் கட​னு​தவி வாராக்​க​ட​னாக மாறி​வி​டுமோ என்ற தவ​றான அச்​சத்​தைப் போக்க வேண்​டும். சிறு​தொ​ழில் கடன்​க​ளுக்கு ஏட்​டில் முன்​னு​ரிமை உண்டு. அது நடை​மு​றை​யில் இருக்க வேண்​டும். உரிய நேரத்​தில்,​ உரிய அள​வில் வழங்​கப்​ப​டும் கட​னு​தவி போன்ற ஒரு "டானிக்' வேறு எது​வும் இல்லை.

மா​நில அர​சு​க​ளின் சிறு தொழில் துறை,​ வழக்​க​மான சிகப்பு நாடா அணு​கு​மு​றையை கைவிட்டு,​ புதிய சூழ​லுக்கு ஏற்ப,​ துரித அணு​கு​மு​றை​களை மேற்​கொள்ள வேண்​டும். இவ் விஷ​யத்​தில் குஜ​ராத் மாநில அர​சின் சிறு தொழில் துறை ஒரு நல்ல எடுத்​துக்​காட்டு என​லாம்.

சிறு தொழில் உற்​பத்​திப் பொருள்​களை மத்​திய,​ மாநில அர​சு​கள் கூடு​மா​ன​வரை கொள்​மு​தல் செய்​வதை ஒரு கொள்​கை​யாக ஏற்க வேண்​டும்.

பெ​ரிய நிறு​வ​னங்​கள் சிறு தொழில் பிரி​வு​களி​லி​ருந்து கொள்​மு​தல் செய்​தி​டும் பொருள்​க​ளுக்​குப் பணம் பட்​டு​வாடா செய்​வ​தில் மிகுந்த தாம​தம் ஏற்​ப​டு​கி​றது. இது கண்​டிப்​பா​கத் தவிர்க்​கப்​பட வேண்​டும். இத்​த​கைய பெரிய நிறு​வ​னங்​கள் வங்​கி​க​ளில் கடன் கேட்​கும்​போது,​ சிறு தொழில் "பில்'களை நிலு​வை​யில் இல்லை என்ற உறு​தி​மொழி கொடுக்க வேண்​டும். இந்த நடை​முறை சில ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்​தது. நாள​டை​வில் இது நீர்த்​துப் போய்​விட்​டது.

சிறு தொழில் கூடங்​களை சர்​வ​தே​சத் தரத்​துக்​குச் சம​மாக நவீ​ன​மா​ய​மாக்க வேண்​டும். அதற்கு உதவி புரி​யும் வகை​யில்,​ தொழில் நுட்ப மேம்​பாடு நிதி ஒன்றை உரு​வாக்​கிச் செயல்​ப​டுத்த வேண்​டும். ஏற்​கெ​னவே,​ இந்த நடை​முறை ஜவு​ளித்​து​றை​யில் சிறப்​பா​கச் செயல்​ப​டு​கி​றது. கடந்த பத்​தாண்​டு​க​ளில் ஜவு​ளித்​துறை "டெக்​னா​லஜி அப்​கி​ர​டே​ஷன் ஃபண்டு' திட்​டத்​தின் மூலம் மத்​திய அரசு 66,275 கோடி ரூபாய் வழங்​கி​யுள்​ளது. ஏனோ இது​போன்ற ஒரு திட்​டத்தை சிறு தொழில் துறைக்கு மத்​திய அரசு இது​வரை அறி​மு​கம் செய்​ய​வில்லை.

செ​பி​யின் புதிய ஏற்​பாடு ஒரு நல்ல தொடக்​கம். ஆனால் அது முழு​மை​யான பயன் அளிக்​குமா என்​பது கேள்​விக்​கு​றியே. எனவே,​ மேற்​கூ​றிய ஆக்​க​பூர்​வ​மான செயல்​பா​டு​க​ளின் மூலமே சிறு தொழில் துறைக்கு பிராண வாயு அளிக்க முடி​யும்.
கட்டுரையாளர் : எஸ். கோபா​ல​கி​ருஷ்​ணன்
நன்றி : தினமணி

ஆ‌ட்டு‌க்கு ஓநாய் காவல்...

ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை எ‌ன்​பது நிய‌ா​ய​ம‌ான முத​லீ‌ட்டு நட​வ​டி‌க்​‌கை​க​ளு‌க்​க‌ா​னது எ‌ன்ற எ‌ண்​ண‌ம் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளு‌க்கு வ‌ந்​து​வி​ட‌க் கூட‌ாது எ‌ன்று உறுதி எடு‌த்​து‌க்​‌கொண்டு அரசு ‌செய‌ல்​ப​டு​கி​ற‌தே‌ா எ‌ன்​கிற எ‌ண்​ண‌ம் சமீ​ப​க‌ா​ல​ம‌ாக நம‌க்கு ஏ‌ற்​ப‌ட்டு வரு​கி​றது.​ ​

​ 1996 முத‌ல் மு‌ம்‌பை ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி​லு‌ம் ‌தேசி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி​லு‌ம் ப‌ட்​டியலி​லி​ரு‌ந்து நீ‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்ள நிறு​வ​ன‌ங்​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்‌கை 1,450.​ இ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​ளி‌ல் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளி‌ன் பண‌ம் சும‌ா‌ர் 58,000 ‌கே‌ாடி ரூப‌ா‌ய் முட‌ங்​கி‌க் கிட‌க்​கி​றது எ‌ன்​பது சமீ​ப‌த்​தி‌ல் வ‌ந்​தி​ரு‌க்​கு‌ம் அதி‌ர்‌ச்சி அளி‌க்​கு‌ம் ‌செ‌ய்தி.​

​ ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​க​ளி‌ல் நிறு​வ​ன‌ங்​க‌ள் த‌ங்​க​‌ளை‌ப் பதிவு ‌செ‌ய்​து​‌கொள்​ள​வு‌ம்,​​ விய‌ா​ப‌ா​ர‌ம் ‌செ‌ய்​ய​வு‌ம் சில ஒழு‌ங்​க‌ா‌ற்று விதி​க‌ளை "‌செபி' என‌ப்​ப​டு‌ம் இ‌ந்​தி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை ​ ஆ‌ணை​ய‌ம் ஏ‌ற்​ப​டு‌த்தி உ‌ள்​ளது.​ அவ‌ற்‌றை உறு‌ப்பு நிறு​வ​ன‌ங்​க‌ள் க‌டை‌ப்​பி​டி‌க்​க‌த் தவ​றி​ன‌ா‌ல் அ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​‌ளை‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் ப‌ட்​டியி​லி​ட‌க்​கூ​ட‌ாது எ‌ன்று த‌டை விதி‌க்​க‌ப்​ப​டு​கி​றது.​ அத‌ா​வது,​​ அ‌ந்த நிறு​வ​ன‌த்​தி‌ன் ப‌ங்​கு​க‌ளை வ‌ா‌ங்​கு​வ​து‌ம் வி‌ற்​ப​து‌ம் த‌டை ‌செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம்.​

​ இ‌ந்​தி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை ஆ‌ணை​ய‌த்​‌தை‌ப் ‌பொறு‌த்​த​வ‌ரை தவறு ‌செ‌ய்த நிறு​வ​ன‌ங்​க‌ள் மீது த‌டை விதி‌த்​த​வு​ட‌ன் தனது கட‌மை முடி‌ந்​து​வி‌ட்​ட​த‌ா​க‌க் கரு​து​கி​றது.​ அ‌ந்த நிறு​வ​ன‌த்​தி‌ல் முத​லீடு ‌செ‌ய்​த​வ​ரி‌ன் நி‌லை‌யை அது ச‌ற்​‌றே​னு‌ம் எ‌ண்​ணி‌ப் ப‌ா‌ர்‌க்க ‌வே‌ண்​ட‌ாம‌ா?​ மு‌றை​ய‌ா​க‌ச் ‌செய‌ல்​ப​ட‌ா​ம‌ல்,​​ ‌பொது​ம‌க்​க‌ள் பண‌த்‌தை ஊத‌ா​ரி‌த்​த​ன​ம‌ாக விர​ய‌ம் ‌செ‌ய்​யு‌ம் இ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​ளு‌க்கு எ‌ன்ன த‌ண்​ட‌னை?​ முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளு‌க்கு ஏ‌ற்​ப​ட‌க்​கூ​டிய இ‌ன்​ன‌ல்​க‌ளை மு‌ன்​கூ‌ட்​டி‌யே எ‌ச்​ச​ரி‌த்​தி​ரு‌க்​க​ல‌ா‌ம் அ‌ல்​லவ‌ா?​ அ‌ப்​ப​டி‌ச் ‌செ‌ய்​தி​ரு‌ந்​த‌ா‌ல் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள் த‌ங்​க​ள‌ா‌ல் முடி‌ந்த அள​வு‌க்கு அ‌ந்த நிறு​வ​ன‌த்​தி‌ல் முத​லீடு ‌செ‌ய்த பண‌த்​‌தை‌த் திரு‌ம்​ப‌ப் ‌பெ‌ற்​றி​ரு‌க்க முடி​யு‌மே,​​ ஏ‌ன் ‌செ‌ய்​ய​வி‌ல்‌லை?​

​ 1,450 நிறு​வ​ன‌ங்​க​ளி‌ல் 1,325 நிறு​வ​ன‌ங்​க​ளு‌க்கு மு‌ம்‌பை ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யு‌ம் 125 நிறு​வ​ன‌ங்​க​ளு‌க்​கு‌த் ‌தேசி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யு‌ம் த‌டை விதி‌த்​து‌ள்​ளன.​ ஆன‌ா‌ல் இ‌ப்​படி நட​வ​டி‌க்‌கை எடு‌க்​க‌ப்​ப​ட​வு‌ள்​ளது எ‌ன்று மு‌ன்​கூ‌ட்​டி‌யே ‌தெரி‌ந்​து​‌கொண்ட அ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​ளி‌ன் ஊ‌க்​கு​ன‌ர்​க‌ள் ​(புர​‌மே‌ா‌ட்​ட‌ர்​க‌ள்)​ த‌ங்​க‌ள் ‌கைவ​ச‌ம் இரு‌ந்த ப‌ங்​கு​க​‌ளை‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் வி‌ற்​று‌ப் பண​ம‌ா‌க்​கி‌க் ‌கொண்​டு​வி‌ட்​ட​ன‌ர்.​ இ‌ந்த 1,450 நிறு​வ​ன‌ங்​க​ளி​லு‌ம் இ‌ப்​‌பே‌ாது புர​‌மே‌ா‌ட்​ட‌ர்​க​ளி‌ன் ப‌ங்கு மதி‌ப்பு அதி​க​ப‌ட்​ச‌ம் 5% ஆக​வு‌ம் கு‌றை‌ந்​த​ப‌ட்​ச‌ம் 1% ஆக​வு‌ம் இரு‌க்​கி​றது.​ ​

​ தவ​று​க​‌ளை‌ச் ‌செ‌ய்து த‌ண்​ட‌னை அனு​ப​வி‌க்க ‌வே‌ண்​டிய புர​‌மே‌ா‌ட்​ட‌ர்​க‌ள் த‌ங்​க​ளு​‌டைய ப‌ங்​கு​க‌ளை வி‌ற்று ந‌ஷ்​ட‌ப்​ப​ட‌ா​ம‌ல் த‌ப்​பி​வி‌ட்​ட​ன‌ர்.​ நட‌ப்​பது எது​வு‌மே ‌தெரி​ய‌ாத அ‌ப்​ப‌ாவி முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள் வச​ம‌ாக ம‌ா‌ட்​டி‌க்​‌கொண்​டு​வி‌ட்​ட​ன‌ர்.​ இ‌ந்த முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளி‌ல் ‌பெரு‌ம்​ப‌ா​ல‌ா​ன​வ‌ர்​க‌ள் தனி நப‌ர் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள்​த‌ா‌ன் எ‌ன்று ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை வ‌ட்​ட‌ா​ர‌ங்​க‌ள் ‌தெரி​வி‌க்​கி‌ன்​றன.​ ​

​ ​ அர​சு​‌டை‌மை வ‌ங்​கி​க​ளி‌ல் ‌சேமி‌ப்​பு‌க்கு மிக‌க் கு‌றை‌ந்த வ‌ட்​டி‌யே தர‌ப்​ப‌ட்டு,​​ அ‌ப்​ப‌ா​வி‌ப் ‌பொது​ம‌க்​க​‌ளை‌ச் சூத‌ா‌ட்​ட‌ச் சி‌ந்​த​‌னை​யு​‌டைய ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் முத​லீடு ‌செ‌ய்​ய‌த் தூ‌ண்​டு​கி​றது நமது அரசு.​ த‌ங்​க​ளு​‌டைய ஊதி​ய‌த்​து‌க்​கு‌ம் ‌சேமி‌ப்​பு‌க்​கு‌ம் ந‌ல்ல ல‌ாப‌ம் கி‌டை‌க்​க‌ட்​டு‌ம் எ‌ன்​கிற நிய‌ா​ய​ம‌ான ஆ‌சை​யி‌ல் ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் முத​லீடு ‌செ‌ய்து ஏம‌ா​று​கி​ற‌ா‌ர்​க‌ள் ச‌ாம‌ா​னிய ம‌க்​க‌ள்.​ இ‌ப்​ப​டி​‌யெ‌ாரு நி‌லை‌மை ஏ‌ற்​பட இரு‌ப்​ப​‌தை​யு‌ம்,​​ ஏ‌ற்​ப‌ட்​டி​ரு‌ப்​ப​‌தை​யு‌ம் க‌ம்​‌பெ​னி​க‌ள் விவ​க‌ா​ர‌த்​து‌றை,​​ ச‌ட்​ட‌த்​து‌றை,​​ நிதி‌த்​து‌றை அதி​க‌ா​ரி​க‌ள் ல‌ட்​சி​ய‌ம் ‌செ‌ய்​த​த‌ா​க‌வே ‌தெரி​ய​வி‌ல்​‌லை‌யே?​ ​ ​

​ ​ ‌பொரு​ள‌ா​த‌ார ம‌ந்​த​நி‌லை க‌ார​ண​ம‌ாக அ‌மெ​ரி‌க்க‌ா உ‌ள்​ளி‌ட்ட ‌தெ‌ாழி‌ல்​வள ந‌ாடு​க‌ள் தடு​ம‌ா​றி​ய​போது‌ம் இ‌ந்​தி​ய‌த் ‌தெ‌ாழி‌ல்​து​‌றை‌க்​கு‌த் ‌தே‌வை‌ப்​ப‌ட்ட நிதி​‌யை‌க் ‌கொண்​டு​வ‌ந்து ‌சே‌ர்‌த்த குரு​வி​க‌ள்,​​ இ‌ந்த நடு‌த்​தர வ‌ர்‌க்​க‌த்​‌தை‌ச் ‌சே‌ர்‌ந்த முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள்​த‌ா‌ன்.​ அதி​லு‌ம் பணியி​லி​ரு‌ந்து ஓ‌ய்​வு​‌பெ‌ற்ற முதி​ய​வ‌ர்​க​ளு‌ம்,​​ தனி​ய‌ா‌ர் நிறு​வன ஊழி​ய‌ர்​க​ளு‌ம்​த‌ா‌ன் கணி​ச​ம‌ாக இரு‌க்​கி‌ன்​ற​ன‌ர்.​ ​

​ த‌ார‌ா​ள​ம​ய​ம‌ா‌க்​க‌ல் எ‌ன்​கிற ‌பெய​ரி‌ல் ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை ச‌ா‌ர்‌ந்த ‌பொரு​ள‌ா​த‌ா​ர‌த்‌தை ஏ‌ற்​ப​டு‌த்தி இரு‌ப்​ப‌தே,​​ தனி​ய‌ா‌ர் நிறு​வ​ன‌ங்​க‌ள் எ‌ந்​த​வி​த‌க் க‌ட்​டு‌ப்​ப‌ா​டு‌ம் இ‌ன்​றி‌ச் ‌செய‌ல்​ப​ட​வு‌ம்,​​ ‌பொது​ம‌க்​க‌ள் பண‌த்​‌தை‌க் ‌கொள்‌ளை அடி‌க்​க​வு‌ம் த‌ா‌னே‌ா?​ ஆ‌ட்​டு‌க்கு ஓந‌ா‌ய் க‌ாவ​லி​ரு‌ந்த க‌தை​த‌ா‌ன்!
நன்றி : தினமணி

புதிய வரவாக டாடாவின் 'இன்டிகோ மான்ஸா '

வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஏற்ப டாடா நிறுவனம், 'இன்டிகோ மான்ஸா' எனும் புதிய ரக காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 2003ல் அறிமுகமான இன்டிகோவை விட நவீனப்படுத்தப்பட்ட காராக மான்ஸா ரக கார் வெளிவந்துள்ளது.
காரின் வெளிப்பகுதி, உட்பகுதி அழகான, எடுப்பான தோற்றத்தை கொண்டது. 4.4 மீட்டர் அகலம், 2,520 மி.மீட்டர் அகலம் கொண்ட சக்கரங்களால் கார் பெரிய அளவில் காணப்படுகிறது. முன்பக்கம் 3 பாரல்ட் ஹெட் லாம்புகள் உள்ளன. கார் கதவின் வெளிப்புற கைப்பிடி மீது பூசப்பட்டிருக்கும் குரோமியம், அதற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.

பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மோனேவிதிக் ஆங்குலர் வடிவிலான விளக்குகள், பின்னால் வரும் வாகனங்கள் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளன. அதனுடைய டிரங்க் 460 லிட்டர் கொள்ளளவு உடையது, நீண்ட தூர பயணத்துக்கும் ஏற்றது.

மற்ற கார்களை விட, மான்ஸா ரக கார் ஓட்டுபவர்களுக்கும், உடன் பயணம் செய்பவர்களுக்கும் மனநிறைவை தரும். பின்புறம் உள்ள இருக்கைகளும் அவற்றின் நடுவில் இருக்கும் கை வைத்துக் கொள்ளும் இடம், வீட்டில் அமர்ந்திருப்பது போல் இருக்கும்.

டில்ட் அட்ஜஸ்டபிள் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுனர் இருக்கை, மின்னியல் தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய வெளிப்புற ரேர்வியூ மிரர்களும் உள்ளன. கொலப்ஸிபிள் ஸ்டீரிங் காலம், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஃபிராண்ட் ஏர் பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. டாக்கோ மீட்டரில் சிவப்பு கோடு இருப்பதற்கு பதிலாக இன்ஜின் க்ரிடிகல் 'ஆர்பிஎம்'ஐத் தாண்டும்போது இண்டிகேட்டர் முள் சிவப்பாக மாறிவிடும். இன்ஜின்,சென்ட்ரல் லாக்கிங் பியூச்சர் ஆகியவை மேலும் பாதுகாப்பு அளிக்கின்றன.

ஏ.ஆர்.ஏ.ஐ., ஆல் சான்றளிக்கப்பட்ட குவாட்ரஜெட் டீஸல் ஒரு லிட்டருக்கு 21.02 கி.மீ., தூரம் கொடுக்கிறது. சபீர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 14.5 கி.மீ தூரம் கொடுக்கிறது. மான்ஸா ரக காருக்கு இரண்டு ஆண்டு அல்லது 75 ஆயிரம் கி.மீ., உத்தரவாதம் தரப்படுகிறது. ஏழு நிறங்களில் வெளிவந்துள்ளது. 401 நகரங்களில் தற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ளன.

டாடா கார் ஷோ ரூம்களில் விற்பனையில் உள்ளன. பெட்ரோல் காரின் விலை 4.64 லட்சம் ரூபாய். டீஸல் காரின் விலை 6.56 லட்சம் ரூபாய். இப்போதுள்ள டாடா இன்டிகோ கார் ரகங்கள் இண்டிகோ சிஎஸ், எக்ஸல், மரினா போன்ற கார்களும் விற்பனையில் உள்ளன. டாடா இன்டிகோ வகை கார்கள் 3.73 லட்சம் ரூபாயில் இருந்து 6.56 லட்சம் ரூபாய் வரை உள்ளன.
நன்றி : தினமலர்


வர்த்தக கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து செபிக்கு மாற்ற வேண்டும்: ரெங்கராஜன்

அரசு கடன் பத்திர வர்த்தக கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து செபிக்கு மாற்ற வேண்டும் என்று பிரதரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி.ரெங்கராஜன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள செய்தியில், அரசு கடன் பத்திரங்களை மீதான கட்டுப்பாட்டை மாற்ற இயலாது என்று கூறமுடியாது. இதை மாற்ற வேண்டும். அரசு கடன் பத்திர மீதான வர்த்தகத்தை செபியின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார நிர்வாகத்தில், அந்நிய செலவாணி முக்கிய பங்கு வகிப்பதால், இதன் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி வசமே இருக்க வேண்டும். நிதி துறை, மற்ற துறைகளுக்கு ஆதரவானதாக இருக்க வேண்டும். பொருளாதார துறை ஸ்திரமாக இருப்பது மட்டுமல்லாமல், திறமையாக செயல்படுவதும் முக்கியம். அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருளாதார துறையின் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, பலவீனத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும் என்று கூறினார்.
நன்றி : தினமலர்


பளீர் வெளிச்சத்துக்கு தரமான 'ஹெட்லைட்'

புதிய அனுபவத்தை தரக்கூடியது கார் அனுபவம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரும் சொந்த காரில் குடும்பத்தினருடன் பயணிக்கும் காலம் தற்போது உள்ளது. வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து புதிய ரக கார்களை தயாரித்து வருகின்றன. கார் வாங்கினாலும், அவற்றை பராமரிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்.
தற்போதைய காலச்சூழ்நிலையில், வாகனங்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

மனிதனுக்கு இரு கண் போன்றது, வாகனங்களுக்கு ஹெட்லைட் விளக்குகள். இரவுப்பொழுதில் எதிர்வரும் வாகனங்களை கடந்து செல்ல தரமான ஹெட்லைட் அவசியம். சரியான முறையில் அவை இருந்தால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். டூ வீலரானாலும், காரானாலும் ஹெட்லைட்டை அவ்வப்போது பராமரித்துக் கொள்ள வேண்டும். எதிர்பாராத விபத்து, விஷமிகளின் தாக்குதல் போன்றவற்றால் முதலில் உடைவது ஹெட்லைட் விளக்குகளே.

ஹெட்லைட்டுகள் புதிய வடிவில் தற்போது வந்துள்ளன. அதன் மேல் உள்ள கண்ணாடி பாகம் வாகனங்களுக்கு தகுந்த அமைப்பில் வட்ட வடிவிலும், சதுர வடிவிலும் விற்பனையில் உள்ளன.

சென்னை, டில்லி, பெங்களூரு நகரங்களில் இருந்தும், உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்தும் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. டூ வீலரை பொறுத்தமட்டில் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையில் உள்ளன. அவை தவிர குறைந்த விலை ஹெட்லைட் தயாரிப்புகளும் சந்தையில் உள்ளன. 35 வாட்ஸ் திறன் கொண்ட பிலிப்ஸ் பல்புகள் 120 ரூபாயிலும், கேலஜன் லைட்டுகள் 100 ரூபாயிலும் உள்ளன. டூ வீலர் ஓட்டிகள் அதிகம் இவற்றை வாங்குகின்றனர்.

கார், சுமோ போன்றவற்றுக்கான அதிகம் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ளது. லூமாக்ஸ், ஆட்டோபால், ஃபியாம் போன்ற நிறுவனங்களின் ஹெட்லைட்டுகள் காருக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெங்களூரு, டில்லி போன்ற நகரங்களில் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

கார், சுமோ போன்றவற்றுகான ஹெட்லைட்டுகள் 160 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உள்ளது. அம்பாஸிட்டர்களுக்கு 140 ரூபாயிலும் உள்ளன. இதற்கென உள்ள 90 வாட்ஸ் திறனுடைய பல்புகள் 150 முதல் 200 ரூபாய் வரையில் உள்ளது.

சேலம் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''கார், டூ வீலர், 407 போன்ற வாகனங்களுக்கான ஹெட்லைட் மற்றும் அதற்குரிய பல்புகள் விற்பனையில் உள்ளன. டில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கம்பெனி கார்களுக்கு தகுந்தவாறு தரமான வடிவமைப்பில் உள்ளன. 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை காருக்கு ஏற்றாற்போல் ஹெட்லைட் வாங்க முடியும்,'' என்றார்.
நன்றி : தினமலர்


இப்போது துபாய்; அடுத்து? வர்த்தக வட்டாரத்தில் பீதி

துபாயில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சர்வதேச சந்தையை அசைத்து பார்த்து விட்டது. துபாய்க்கு பிறகு, இனி எந்த நாட்டில் இது போன்ற பிரச்னை ஏற்படும் என்ற பீதி, சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. துபாயில் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம், தான் வாங்கிய 3,70,000 கோடி ரூபாய் கடனை, உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, கடனுக்கான தவணையை ஆறு மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி, கடன் கொடுத்தவர்களை இந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. இது, சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பணக்கார நாடான துபாயிலேயே நிதி நெருக்கடி உள்ளது என்ற பேச்சு எழுந்ததையடுத்து, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.

இதையடுத்து, இது போன்ற நிதி நெருக்கடி அடுத்து, எந்த நாட்டில் ஏற்படுமோ என்ற பீதி எழுந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இந்த கவலை உள்ளது. பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக, இந்த நாடுகளில் அரசு செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பட்ஜெட்டில் பற்றாக்குறை விழுமோ என்ற பேச்சு உள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு கஜானா வலிமையாக உள்ளதா என்ற கவலையான குரல்கள் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஜெர்மனியிலும் அரசின் கடன் அளவு எகிறியுள்ளது. ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு ஜெர்மனியில் அரசு கடன் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அயர்லாந்தில், அடுத்த ஆண்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில், அரசின் கடன் 83 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த 2007ல், மொத்த பொருளாதார வளர்ச்சியில் அரசின் கடன் 25 சதவீதமாக மட்டுமே இருந்தது. லட்வியாவும் பெருமளவு கடனில் சிக்கியுள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், 'பல்வேறு நாடுகளில் அரசு கடன் திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு இருந்தால், உடனடியாக சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்.,) இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; சிறப்பு பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டும்' என்றனர்.
நன்றி : தினமலர்