Tuesday, September 8, 2009

சத்யம் நிறுவனர் ராஜூவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ரூ. 7 ஆயிரத்து 800 கோடி மோசடி வழக்கில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப் பட்டார். இந்த மோசடி குற்றத்துக்காக சஞ்சலகுட்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ராஜூவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர், ஐதராபாத் நிஜாம் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி : தினமலர்